இகலான் இன்னாத எல்லாம் ஆம்- ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே தீயனவெல்லாம் உண்டாகும்; நகலான் நல்நயம் என்னும் செருக்கு ஆம்- அதற்கு மறுதலையான நட்பினால் நல்ல நேர்பாடு (நீதி) என்னும் செல்வம் உண்டாகும். 'இன்னாத' வறுமை, உறுப்பறை, பழி, பளகம்(பாவம்) முதலியன. 'நகல்' 'செருக்கு' என்பன அவற்றிற்குக் கரணியமான நட்பையுஞ் செல்வத்தையுங் குறித்தன. நேர்பாடு இங்கு ஒரு செல்வமாகக் கொள்ளப் பெற்றது. இனி, 'நன்னய மென்னும் செருக்கு' என்பது பெருநன்மையாகிய செல்வம் எனினுமாம். இதில் வந்துள்ளது வேற்றுமையணி.
|