மாசு அற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர். சலம்பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மையொடு பொருந்தாத செயல்களைச் செய்யார். பூட்கை பூணுங்கொள்கை. இம்முன்று குறளாலும் குடிப்பிறந்தார் வறுமையுற்றபோதும் தங்குடிப் பண்பிற் குன்றாரென்பது கூறப்பட்டது.
|