சான்றாண்மைக்க ஆழி எனப்படுவார் - சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார்; ஊழிபெயரினும் - ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும் ; தாம் பெயரார் - தாம் தம் சால்பெல்லை கடவார். சால்பின் பெருமை பற்றி அதனைக் கடலாக்கியும் , அதன் எல்லையில் நிற்றலின் அதை யுடையாரை அதன் கரையாக்கியும், கூறினார்.
|