பக்கம் எண் :

அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.

 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - எல்லார்மேலும் அன்புடைமையும்  எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ; பண்புடைமை என்னும் வழக்கு - பண்புடைமையென்னும் ஒழுக்கத்திற்கு இன்றியமையாத இயல்களாம்.

அமைதல் நிறைதல். உம்மை முற்றும்மை, வழக்கிற்குக் கரணிய மானவற்றை வழக்கென்றே கருமியமாகச் சார்த்திக் கூறினார். இவ்விரு குறளாலும் பண்புடைமைக்கு ஏதுவான நிலைமைகள் கூறப்பட்டன.