906. | இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் |
| அமையார்தோ ளஞ்சு பவர். |
|
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது. |
907. | பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் |
| பெண்ணே பெருமை உடைத்து. |
|
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும். |
908. | நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் |
| பெட்டாங் கொழுகு பவர். |
|
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள். |
909. | அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் |
| பெண்ணேவல் செய்வார்கண் இல். |
|
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது. |
910. | எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் |
| பெண்சேர்ந்தாம் பேதைமை இல். |
|
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க மாட்டார்கள். |