96. குடிமை |
951. | இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் |
| செப்பமும் நாணும் ஒருங்கு. |
|
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது. |
952. | ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் |
| இழுக்கார் குடிப்பிறந் தார். |
|
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள். |
953. | நகையீகை இன்சொல் இகழாமை நான்கும் |
| வகையென்ப வாய்மைக் குடிக்கு. |
|
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். |
954. | அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் |
| குன்றுவ செய்தல் இலர். |
|
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள். |
955. | வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி |
| பண்பின் தலைப்பிரிதல் இன்று. |
|
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள். |