பக்கம் எண் :

திருக்குறள்71அறம்

36. மெய்யுணர்தல்
 

351.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணப் பிறப்பு.

 

பொய்யான   ஒரு    பொருளை    மெய்ப்பொருள்   என்று  மயங்கி
நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
 

352.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

 

மயக்கம்   தெளிந்து  மாசற்ற    உண்மையை உணர்ந்தால் அறியாமை
அகன்று நலம் தோன்றும்.
 

353.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான நணிய துடைத்து.

 

ஐயப்பாடுகளைத்    தெளிந்த     ஆராய்ச்சி   வாயிலாகத்   தீர்த்துக்
கொண்டவர்களுக்குப்    பூமியைவிட  வானம்  மிக அருகில் இருப்பதாகக்
கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
 

354.

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு.

 

உண்மையைக்     கண்டறிந்து       தெளிவடையாதவர்கள்,    தமது
ஐம்புலன்களையும்  அடக்கி     வெற்றி  கண்டிருந்தாலும்  கூட அதனால்
அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
 

355.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

வெளித்தோற்றத்தைப்     பார்த்து    ஏமாந்து  விடாமல், அதுபற்றிய
உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.