பொருளை , காமுற்று (பெற) - விரும்பி, வவ்வார் - (சமயங்கண்டு) அபகரியரதவராய், விடுதல் - (அதனை மறந்து) விடுதல்,இனிது -. "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும் " (குறள் - 168) ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்; "சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏமாப் புணையைச் சுடும்" (குறள் - 39) ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும், "நடுவின்றி நன்பொருள்வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்" (குறள் - 171) ஆகலின், ‘கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று, வவ்வார் விடுத லினிது ' எனவுங் கூறினார். கவ்வித்தாங் கொண்டு என்புழி ‘கொண்டு எச்சதிரிபென்க. தாம் : அசை 37. இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே தடமென் பணைத்தோள் தளிரிய லாரை லிடமென் றுணர்தல் இனிது. (ப-ரை.) இளமையை - தனக்குள்ள இளமைப் பருவத்தை, மூப்பு என்று - முதுமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல் இனிது-; கிளைஞர்மாட்டு - சுற்றத்தாரிடத்தே, அச்சு இன்மை - அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களை, கேட்டல் கேட்பது, இனிது-; தட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பணை - மூங்கிலை யொத்த, தோள் -தோள்களையும், தளிரியலாரை - தளிரை யொத்த மென்மையையுமுடைய பிற மகளிரை, விடம் என்று - நஞ்சென்று , உணர்தல் -நினைத்தல் இனிது-. "மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்கா யுதிர்தலும் உண்டு " (நாலடி - 19) ஆகலின், ‘இளமையை மூப்பென் றுணர்த லினிதே ' என்றார்.
|