பக்கம் எண் :

122பால காண்டம்  

முதலிடம்  வகிக்கும்  பகையை  ஒடுக்கியதால்  நாட்டிலே  எவ்வகைத்
தீங்கும் நேராவண்ணம் காத்தான் என்பது கருத்து.

மறுகுவது: கழல்வது  அல்லது நிலைகெட்டுக் கலங்குவது மறுபக்கம்:
மயக்கமுமாம் அரோ: அசை.                                 3
 

183.

‘அருந் தவ முனிவரும். அந்தணாளரும்.
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும். என் அகத்தை’ என்றனன்.
 

அருந்தவ    முனிவரும் - அரியதவத்தை உடைய முனிவர்களும்;
அந்தணாளரும்
-   அறவோர்களாகிய   அந்தணர்களும்;  வருந்துதல்
இன்றியே
- யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே; வாழ்வின் வைகினார்-
துன்பமற்று   நல்வாழ்விலே   இருந்தார்கள்;   என்பின்  இருந்துயர்
உழக்குநர்
-  (மக்கள்  பேறில்லாத)  எனது  ஆட்சிக்குப்  பிறகு (அப்
பெரியவர்கள்)  மிகவும்  துன்பத்தாலே  வருந்துவார்களே; என்பதோர்
அருந்துயர்
- என்பதொரு அரியதுயரமானது; என் அகத்தை வருத்தும்
என்றனன்
- எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.

அருந்தவம்      அருமைத்தவம்    என்றதில்   ‘மை’   கெட்டது.
அந்தணாளர்:   அந்தண்மையை   ஆளுபவர்    எனவே   அறவோர்.
வைகினார்:  நிலைத்து  உள்ளார்  என்பதும்   பொருளாம். இருந்துயர்:
மிகுந்த   துன்பம்.  ‘இரு’  மிகுதியை  உணர்த்தி  நின்றது   என்பின்:
எனக்குப்  பிறகு.  வருத்தும்:  வருந்தச்  செய்யும்   என்பது  பொருள்.
வாழ்வின்: வாழ்வு என்பதற்கு நல்வாழ்வு என்பது பொருள்.

தானும்.   தனது முன்னோரும் காத்த நெறிகளைத் தனக்குப் பிறகும்
பேணிக்காத்து.    தனது     நற்குணங்களையே    பெற்று   நாட்டை
நன்னெறியில்   நிறுத்தி.   ஆள.  ஒரு  புத்திரன்  வேண்டுமே   என
நினைத்த தயரதன் நல்லதந்தையாகத் திகழ்கிறான் எனலாம்.         4

                                           முனிவன் முன்னிய
 

184.

முரசு அறை செழுங் கடை. முத்த மா முடி.
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்.
விரை செறி கமல மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்
-
 

முரசு     அறை  செழுங்கடை- முரசு முழங்கும் கடைவாயிலை
உடையவனும்;  முத்தமாமுடி  அரசர் தம்கோமகன்-  முத்து முதலிய
மணிகளால்   அமைந்த   மணிமுடி   தரித்திருப்பவனுமான.   மன்னர்
மன்னனாகிய  தயரதன்; அனைய கூறலும் - அத்தகைய  சொற்களைச்
சொல்லும் (அது கேட்ட); விரை செறிகமலமென் பொகுட்டு மேவிய-
மணம்    செறிந்த    தாமரை     மலரின்     அகவிதழ்   உச்சியில்
அமர்ந்திருப்பவராகிய;  வரசரோருகன் மகன்- மேலான நான் முகனது
மகனாகிய  வசிட்டன்;  மனத்தில் எண்ணினான்- (பின்வருவனவற்றை)
தனது மனத்திலே நினைப்பானாயினான்.