பக்கம் எண் :

  கையடைப் படலம்213

தோளில்; கொற்றவில்  ஒன்று  தாங்கினான் - வெற்றி மிகுந்த வில்
ஒன்றினையும் சுமந்தான்.

வென்றி:   வெற்றி.  வெல்:  பகுதி.  விசித்தல்: கட்டல். சிசி: பகுதி.
புடை:       பக்கம்.       தூணியில்       அம்புகள்     என்றும்
அறாத்தன்மையுடைமையால்  ‘’மெய்ம்மை  போல் என்றும் தேய்வுறாத்
தூணி’’  என்றார்.  இரு  குன்றம்:  பெரிய  மலை எனலுமாம். உலகம்
தாங்கும்  உறுதி  தோள்களுக்கு  உண்மை  பற்றி உலகம் தாங்கினான்
என்றார். உலகம் தாங்கினான் - விசித்து -  யாத்து - வில் தாங்கினான்
என்க.                                                   20
 

334.அன்ன தம்பியும் தானும். ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக்கொண்டாலென.
சொன்ன மா தவன் - தொடர்ந்து. சாயைபோல்.
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்.
   

அன்ன  தம்பியும் தானும் - அவ்வாறே வில்தாங்கிய தம்பியாகிய
இலக்குவனும் இராமபிரானும்; ஐயனாம்  மன்னன் இன் உயிர் வழிக்
கொண்டால்  என
 -  தமது  தந்தையாகிய  தசரத மன்னனது இனிய
உயிரே   தொடர்ந்து   செல்லுதல்   போலவும்; சாயை   போல்  -
அம்முனிவனது   நிழல்  போன்றும்; சொன்ன மாதவன்  தொடர்ந்து
- மேலே சொன்ன விசுவாமித்திர முனிவனைத் தொடர்ந்து; பொன்னின்
மாநகர்
 -  அழகிய அந்த அயோத்தி நகரத்தின்; புரிசை நீங்கினான்
- மதிற்புறத்தைக் கடந்து சென்றான்.

இராமனை மன்னன் தனது உயிரெனக் கருதி இருந்தமையால் இங்கு
‘மன்னன்  இன்னுயிர்  வழிக்  கொண்டாலென’ என்றார்.  இங்கு உயிர்
ஆன்மாவைக் குறித்து நின்றது. முனிவனைத் தொடர்தற்கு  ‘உயிர்வழிக்
கொள்ளலும்’.  அவன்  பின் செல்லுதற்கு. ‘’சாயை’’யும்  உவமைகளாம்
‘சொன்ன’  என்பதற்குப்  பொன்வடிவினனான  என்பது   பொருளாம்.
‘இதுவரை   இராமன்  பெருமையைச்  சொன்ன’  என்றும்   கூறலாம்.
‘பொன்னின் மாநகர்’ பொன்னாலமைந்த எனலும் பொருந்தும்.  புரிசை:
மதில்: நீங்குதல்: நீங்கிப் போதல் (கடத்தல்).                     21
 

335.வரங்கள் மாசு அற. தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்.
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்.
   

தவம்  செய்தோர்கள் - தவத்தைச் செய்தவர்கள்; வரங்கள் மாசு
அறவாழ்
 -   அத்தவத்தால்  பெற்ற வரங்களுக்குக் குறைவில்லாதபடி
இருந்து  வாழ்கின்ற; புரங்கள் நேர் இலா நகரம் - பதவிப்புரங்களான
அமராவதி.     அளகை    ஆகியவையும்   நிகரில்லாத   அயோத்தி
மாநகரத்தை;   நீங்கிப்  போய்   -   அம்மூவரும்  நீங்கிச் சென்று;
அரங்கின்   ஆடுவார்  சிலம்பின்   அன்ன -  நடன  அரங்கிலே
ஆடுகின்ற நாட்டிய மகளிரின்