ஆரணத்து உறை யுளாய் - வேதங்களை வாழும் இடமாக உடையவனே; வாரணத்து உரிவையான் - யானைத் தோலைப் போர்த்தவனாகிய சிவபிரான்; மதனனைச் சினவு நான் - மன்மதனைக் கோபித்த நாளில்; ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் - பசையற்றுப் போய் அவனது சிதைந்த உடல் இங்குச் சிதறி வீழ்ந்ததால்; இவணெலாம் அங்கநாடு - இந்த இடமெல்லாம் அங்க நாடு என அழைக்கப்படும் இடமாகும்; இதுவும் அக் காரணக்குறி உடைகாமன் ஆச்சிரமமே - இந்த இடமும். அந்தக்காரணக் குறியை உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும். வாரணம்: யானை. உரிவை: உரித்த தோல். யானை உரித்த தோலைச் சிவபிரான் போர்வையாக உடையவன் என்பது புராணச் செய்தி. தனது யாக நிலையைக் கெடுத்து. காம இச்சையை யுண்டாக்குவதற்கு மலர்க்கணைகளை எய்த மன்மதனைக் கோபித்து எரித்த செய்தி புராணத்துட் கூறப்பட்டதாகும்; ஈரம்: உடற்பசை உகுதல்: சிதறுதல் ஆரணம்: வேதம். ஆரண+துறை எனவும். ஆரணத்து -உறையுள் எனவும் இருவிதமாகவும் விரித்துப் பொருள் கூறலாம். 2 |