பக்கம் எண் :

218பால காண்டம்  

பற்று  அவா வேரொடும் பசை அற-   உலகப்    பொருள்களில்
பற்றியுள்ள  ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற
-  அவ்வாசையின்   பயனாய்   வரும்  பிறவி நோய் சென்று முடியவும்;
வால்  உணர்வு  மேல்  
-  மெய்யுணர்வு  பெற்ற; முடுகினார் அறிவு
-  விரைந்து  சென்று  அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று
உற்றவானவன்  
-  சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே;
இருந்து  யோகு  செய்தனன்  எனில்  
-  இங்கிருந்து  யோகத்தைச்
செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ - இதன்
தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.

அவா  வேரொடும் பசையறுதல்: ஆசை வேருடன் பற்றறுதல். போய்
முற்றல்:  முற்றிப்  போதல். வால் உணவு: மெய்யறிவு. யோகு:   யோகம்
(கடைக்குறை).   அளவது;   அளவுடையது.   சிவபெருமான்   ஆன்ம
ஞானிகளுக்குத் தலைவன் என்றபடி.

உலகப்   பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால் - அந்தப் பற்றுக்
காரணமாக   வரும்  பிறவிதீரும்  -  பிறவி  நீங்க  ஆன்ம    ஞானம்
உண்டாகும்.  அந்த   ஞானத்தால்  இறைக்காட்சி  பெறலாம் என்பதால்
‘’வாலுணர்வு  மேல்வர முடுகினார்  அறிவு  சென்றுற்ற வானவன்’’ எனச்
சிவபெருமானைச்  சிறப்பித்துக் கூறினார்.  அவன்  இருந்து  தவம்செய்த
இடமாதலின் இதன் தூய்மை சொல்ல இயலாததென்றார்.             3
 

342.
 

என்று. அ(வ்) அந்தணன் இயம்பலும்.
   வியந்து. அவ் வயின்
சென்று. வந்து எதிர் எழும்
   செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து. அலர் கதிர்ப்
   பரிதி மண்டலம் அகன்
குன்றின்நின்று இவர. ஓர்
   சுடு சுரம் குறுகினார்.
 

என்று   அவ்  அந்தணன்  இயம்பலும்  -  என்று அம்முனிவர்
சொல்லவே;  வியந்து  சென்று - இராம. இலக்குவர் ஆச்சரியப்பட்டுப்
போய்;  உவந்து எதிர்எழும் - மகிழ்ந்து. எதிர்கொண்டழைக்க எழுந்து
வரும்;  செந்நெறிச்   செல்வரோடு   -   செம்மையான   நெறியில்
செல்பவராகிய  முனிவர்களுடன்;  அவ்வயின்  அன்று  உறைந்து  -
அவ்விடத்தில்  அன்று தங்கியிருந்து; அலர்கதிர்ப் பரிதி மண்டிலம் -
விரிந்த   கதிர்களையுடைய  சூரியன்;  அகன்குன்றினின்று  இவர  -
அகன்ற  மலையிலிருந்து  மேலே  ஏற;  ஓர்  சுடுசரம்  குறுகினார் -
(மூவரும்) ஒரு பாலைவனத்தை நெருங்கினர்.

செம்மை+நெறி:   செந்நெறி (நன்னெறியாளர் என்றுமாம்). அலர்கதிர்:
விரிகதிர்.  பரிதிமண்டலம்:  சூரியமண்டலம்  அகன்குன்று:   உதயகிரி.
இவர்தல்: ஏறுதல். குறுகி: சேர்ந்து.