வெகுண்டும் என்னினும்- மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்; ஐயன் முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்; என்று - என்று கருதி; நாம் போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்; என்று அரிதின் கொண்டு - என்று சொல்லிச்சிரமப்பட்டு (அவனைத் தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான் - சென்றான். வெகுண்டும் - கோபித்தோம்; தன்மைப் பன்மை வினைமுற்று. வேதம் வல்ல நீ ஓர்அடிச்சியின் பொருட்டுச் சினம் கோடல் தகுதி அன்று என்று குறிப்பித்தானாம்; என்றது பரதன்தாயைச் சீறாது விட்டதற்கு மேற்குறித்த காரணத்தைச் சுட்டியது எனலும் ஆம். 56 பரதன் இராமன் தங்கிய சோலையில் தங்குதல் 2300. | மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும் கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட, ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் தானும் வைகினான். |
மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்; மூரி ஞாலமும் - பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து - ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல் போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய சோலையில் - இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் - (பரதன்) தானும்; வைகினான் - (அன்று) தங்கினான். பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் - அன்பு கலந்துறவு கொண்டநெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும்ஆதலின் இராமன் தங்கிய சோலை பரதனுக்குத் துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி - உவமையாகுபெயர். 57 இராமன் தங்கிய புல்லனை அருகில் மண்ணில் பரதன் இருத்தல் 2301. | அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன், கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன், வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். |
(பரதன்) அல்- இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்- (தன்)நீண்ட கண்களிலிருந்து வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல் அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் - மலையில் விளையும் கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைத்து |