பக்கம் எண் :

6ஆரணிய காண்டம்

நடை வேகத்தால்); வாத விசையில் - காற்றின் விசையால்; பஞ்சு பட்டது
பட -
பஞ்சடையும் நிலையை அடையும் படி; படியின்மேல் முடுகி -
நிலத்தின் மீது விரைந்துநடந்து; ஏ - அசை.

     விராதன் நஞ்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும்
கொண்டவன். அவன் நடைவேகத்தால் எதிர்ப்படு மலைகள். பஞ்சுபோல்
சிதறிப் பறந்தன. தாடகை வருகையையும் இவ்வாறே‘கிரிகள் பின் தொடர
வந்தாள் (368) _ என்பார்._நஞ்சு வெற்புருவு பெற்றிடை நடந்தது என்பது
இல்பொருளுவமை. செனியன் - சென்னியன், இடைக்குறை.              6

2523.புண் துளங்கியன கண்கள் கனல்
     பொங்க, மழை சூழ்
விண் துளங்கிட, விலங்கல்கள்
     குலுங்க, வெயிலும்
கண்டு, உளம் கதிர் குறைந்திட,
     நெடுங் கடல் சுலாம்
மண் துளங்க, வய அந்தகன்
     மனம் தளரவே.

    புண் துளங்கி அன கண்கள் - புண்கள் துடிப்பது போன்ற கண்களில்;
கனல் பொங்க - நெருப்புப் பொறி பறக்க; மழைசூழ் விண் துளங்கிட -
மேகம் சூழ்ந்த வானம் நடுங்க; விலங்கல்கள் குலுங்க - மலைகள் நடுங்கிட;
வெயிலும் - கதிரவனும்; கண்டு - பார்த்து; உளம் கதிர்குறைந்திட -
மனம் ஒளி கெட; நெடுங்கடல் சுலாம்- பெரியகடல் சூழ்ந்த; மண்துளங்க-
நிலம் நடுங்க; வய அந்தகன் - வலிமையுடைய யமனும்; மனம் தளர -
உள்ளம் தளர்ச்சி அடைய; ஏ - அசை.

     கண்ணில் கனல் பொங்குவது புண்ணில் செந்நிறம் விளங்குவது
போன்றது, வெயில், மழை -ஆகுபெயர். அந்தகன் - உயிர்களுக்கு முடிவை
உண்டாக்கும் கண்ணற்றவன்.                                     7

2524.புக்க வாள் அரி முழங்கு
     செவியின் பொறிஉற,
பக்கம் மின்னும் மணி மேரு
     சிகரம் குழைபட,
செக்கர் வான் மழை நிகர்க்க, எதிர்
     உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர்
     செச்சையி னொடே