| | நீதியாய்! நினைந்தனென்' என, நிகழ்த்தினான்; 'சாது ஆம்' என்ற, அத் தனுவின் செல்வனும், 'போதும் நாம் வாலிபால்' என்ன, போயினார். |
ஆதலால் -'ஆதலால்';நீதியால் -நீதிநெறியை உடையவனே! அன்னதே -முன்னர் வாலியைக் கொன்று வானரப் படைகளைக் கொண்டு சீதையைத் தேடி அறிவதே;அமைவது ஆம் என -பொருத்தமான செயலாகும் என்று;நினைந்தனென்-எண்ணுகிறேன்';என நிகழ்த்தினான்- என்று அனுமன் கூறினான்;சாது ஆம் என்ற -நின் கருத்து ஏற்கத் தக்கதே என்று கூறிய;அத்தனுவின் செல்வனும் -அந்த வில்வீரனாகிய இராமனும்; நாம் வாலி பால் போதும் -'நாம் வாலி இருக்குமிடம் போவோம்';என்ன- என்று கூற;போயினர் -அவர்கள் அனைவரும் அங்குச் சென்றார்கள். மேலே 29வது பாடலில் கூறிய செய்தியையே இப்பாடலில் 'அன்னது' எனச் சுட்டப்பட்டது. வாலியைக் கொன்று, படை திரட்டிச் சீதையைத் தேடுதலே ஆண்டுச் சுட்டிய பொருளாகும். சாது - நல்லது, ஏற்கத்தக்கது, உடன்பட்ட எனும் பொருளில் அமைவது. ''சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை'' (திருவாய்மொழி. 3-1-6). ''சாது என்று உணர்கிற்றியேல்'' (5895) எனப் பின்னரும் கூறுவார். தனுவின் செல்வன் - இராமன். இராமன் வில்லாற்றலைக் குறிக்கும் தொடர். முதலடி முற்றுமோனை. 34 |