பக்கம் எண் :

56சுந்தர காண்டம்

விழுங்குவதற்குஆயத்தமாக நின்றாள்; அது வீரன் நோக்கி - அவள்
செயலை அனுமன் பார்த்து; திக்கு ஆர் அவள் வாய் - திசைகளைப்
பொருந்திய அவளுடைய வாயானது; சிறிதாம் வகை - சிறிதாகும்படி;
சேணில் நீண்டான் - ஆகாயத்தில் படிப்படியாக வளர்ந்தான்.

     அரக்கியின்வாய் திசைகளின் எல்லையில் இருந்தது. அனுமன் பேருரு
வானையளாவி இருந்தது. புழை - குகை. மேருப் புழை என தொக்கு அடங்கித்
துயில்தரு கண்ணினான். (யுத்த - கும்ப 68) அரக்கியும் இதில் உள்ள உம் -
அசை புக்காலும் என்பதிலுள்ள உம்மை தொக்கு புக்கால் என வந்துள்ளது.
                                                        (70)

4811.

நீண்டான்உடனே சுருங்கா
     நிமிர்வாள் வயிற்றின்
ஊண்தான் எனஉற்று ஓர் உயிர்ப்பு
     உயிராதமுன்னர்
மீண்டான் அதுகண்டனர் விண்உறை
     வோர்கள் எம்மை
ஆண்டான்வலன்என்றுஅலர் தூஉய் நெடிது
     ஆசிசொன்னார்.

     நீண்டான் -வளர்ந்துஉயர்ந்த அனுமன்; உடனே சுருங்கா -
சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு; நிமிர்வாள் வயிற்றின் - ஓங்கி
வளர்ந்த சுரசையின் வயிற்றில்; ஊண்தான் என உற்று - உணவு என்று
சொல்லும்படி பொருந்தி; ஓர் உயிர்ப்பு உயிராத முன்னர் - அவள் ஒரு
மூச்சு விடுவதற்கு முன்; மீண்டான் - வெளி வந்தான்; விண் உறைவோர்கள்
-
தேவர்கள்; அது கண்டனர் - அச் செயலைப் பார்த்தனர்; எம்மை
ஆண்டான் வலன் என்று -
எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை
உடையவன் என்று; அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் - மலர் தூவி
நீண்ட ஆசி கூறினார்கள்.

     நெடிது வளர்ந்துஉடனே சுருங்கி வயிற்றில் நுழைந்து வெளி வந்தது
அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் உணர்த்தியமையால் தேவர்
மகிழ்ந்தனர்.                                            (71)

அனுமன் செயலைநோக்கிய தேவர்கள் வாழ்த்துக் கூறல்

4812.

மின்மேற்படர் நோன்மையனாய் உடல்
     வீக்கம்நீங்கி