பகைவனான இராமனுக்கு; இனிய நண்பு செய் நீயுமே நிகர்- இனிய நட்புள்ளவனாகிய நீயுமே சமமானவர்கள்; பிறர் நிகர்க்க நேர்வரோ - மற்றவர் எவரும் சமமாவார்களோ? |
(3) |
6368. | 'பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என, |
| சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின், |
| ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின் |
| வாழவோ கருத்து ? அது வர வற்று ஆகுமோ ? |
|
பாழிசால் இரணியன் - வலிமைமிக்க இரணியனுடைய; புதல்வன் பண்பு என - புதல்வனான பிரகலாதனுக்குரிய குணத்தைப் போல; சூழ்வினை முற்றி - சூழ்ச்சியை நிறைவேற்றி முடித்து; (அதனால்) யான் அவர்க்குத் தோற்றபின்- நான் அந்த மனிதனுக்குத் தோல்வியடைந்தபின்பு; ஏழை நீ என் பெருஞ்செல்வம் எய்தி- இப்போது அறிவிலியாகிய நீ எனது பெரிய இலங்கையின் ஆட்சிச் செல்வத்தை அடைந்து; பின் வாழவோ கருத்து- பின்னர் அரசனாக வாழலாம் என்பதோ உனது கருத்து?; அது வர வற்று ஆகுமோ- அது நடக்கக் கூடிய காரியம் ஆகுமோ?; |
பாழி - வலிமை. வரவற்று - நிகழக் கூடியது. |
(4) |
6369. | 'முன்புற அனையர்பால் அன்பு முற்றினை; |
| வன் பகை மனிதரின், வைத்த அன்பினை; |
| என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி; |
| உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ ? |
|
முன்புற அனையர் பால்- இதற்கு முன்னேயே நீ அந்த மனிதர்களிடம்; அன்பு பூண்டனை- அன்பு பூண்டவனாய் இருந்தாய்; வன் பகை மனிதரின்- நமது வலிய பகைவர்களான அந்த மானிடர்களிடத்தில்; வைத்த அன்பினை- வைக்கப்பட்ட அன்புடையவனாக இருக்கிறாய்; என்புற உருகுதி அழுதி ஏத்துதி - எலும்பும் உருகும்படி அவர்களை நினைந்து உள்ளம் உருகுகிறாய் அழுகிறாய், துதிக்கிறாய்; உன்புகல் அவர்- உனக்குப் புகலிடம் அவர்களே என்றால்; பிறிது உரைக்க வேண்டுமோ - வேறு சொல்ல வேண்டுமோ? |
முன்புற - முன்னதாக |
(5) |