பக்கம் எண் :

2யுத்த காண்டம் 

கரையை உடைய இரத்த அலைகளைக் கடந்து,; பூதர உதரம் 
புக்கென   ஓடினர்
-  மலை   வயிற்றுள்  புகுந்தாற்போல்  
(கோபுர வாயிலில் புகுந்து) (இலங்கையினுள்) ஓடினர்.
 

தூதர்,  ரோதனம்,  பூதரம்,  உதரம்,  ரோதம் என்பன
வடசொற்கள். ரோதனம் - அழுகை; பூதரம் - மலை; உதரம் -
வயிறு, நடுவிடம்; ரோதம் கரை; ஓதம் - அலை; வேலை -
கடல்;  சீதம் - குளிர்ச்சி,  ரோதம்  என்பதற்குத் துன்பம்
என்று பொருள் கொள்ளினுமாம். 
 

(1)
 

9187.

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என, 

முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ, 

'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார், 

சென்று, இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார். 

 

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என- (தூதர்கள்)
அன்றிற்  பறவைகளின்  அழகிய  கரிய  பேடைகளைப் போல;
அரக்கியர் முன்றில் எங்கும் மொய்த்து அழ- அரக்கியர்
தம்  முன்றில்  எங்கும்  மொய்த்துக் கொண்டு  அழ; 'இன்று
இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார்
- 'இன்று இலங்கை 
நகரம் அழிந்தது' என்று கூறிக் கொண்டு ஏங்குபவராய்; இலங்கு 
அயில்  தாதையைச்  சென்று சேர்ந்துளார்
- விளங்குகின்ற
வேற்படையையுடைய இந்திரசித்தின் தந்தையைச் சேர்ந்தார்கள்.
  

இலங்கை மாநகரின் செல்வத் திருமகனும் இளவரசனும்
ஆகையினால் இந்திரசித்தின் இறப்பு இலங்கை அழிவதற்கு
ஒப்பாகும் எனவே 'இன்று இலங்கை அழிந்தது' என்று தூதர்
ஏங்கினர் என்பதாகும். 
 

(2)
 

9188.

பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் 

நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார், - 

'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச் 

சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார். 

 

தம் பல்லும் வாயும் மனமும் பாதமும்- (சேர்ந்த தூதுவர்)
தமது  பற்களும்,   வாயும்,   மனமும்,  பாதமும்;   நல்உயிர்ப்
பொறையோடு நடுங்குவார்
-  சிறந்த  உயிர்ப்  பாரத்தோடு
நடுங்கப் பெற்றவரும்; பயம்  சுற்றத் துளங்குவார்- அச்சம்
சூழ்ந்து  கொள்ள நிலை   கலங்கினவரும் ஆகி,; 'உன்மகன் 
இன்று இல்லை ஆயினன்' எனச்