| பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் |
| என்பார் |
| கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் |
| காண்கில்' என்றான். |
|
ஐய! புறவு ஒன்றின் பொருட்டு - ஐயனே! தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காக; இன்யாக்கை புண் உற அரிந்த புத்தேள் அறவனும் - தன் இனிய உடம்பை புண் உண்டாகத் தசை அரிந்தளித்த தெய்வத்தன்மையுள்ள அறவானாம் சிபியும்; நின்னை நிகர்க்கிலன் - உனக்கு ஒப்பாக மாட்டான்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே - அதற்குப் பிறகு ஒழிந்த பிற செயல்களைக் கூறுவது என்ன பயன்? பேர் அருளாளர் என்பார்- பெரிய அருளாளர் எனப்படுவோர்; தமர்க்கு இடர் காணில் - தம்மைச் சார்ந்தவர்க்குத் துன்பம் வரக் கண்டால்; கறவையும் கன்றும் ஒப்பார் என்றான் - பசுவையும் கன்றையும் போல் விரைந்து சென்று காப்பர் என்று கூறினான். |
(49) |
9580. | சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று |
| எல்லாம் |
| நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் |
| நீக்கி, |
| கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் |
| கொடுத்து, கொண்டல் |
| மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு |
| ஆற்றலுற்றான். |
|
சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்- கவசம் முதலிய போர்க்கெனத் தாங்கிய பாரத்தை எல்லாம்; நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி - நீல நிறமுள்ள சூரியனைப் போல இராமன், இலக்குவன் உடம்பிலிருந்து முறையாக நீக்கி; கோல் சொரி தனுவும் - அம்புகளை எய்யும் வில்லையும்; கொற்ற அனுமன் கை கொடுத்து- வெற்றிக்குரிய அனுமனின் கையில் கொடுத்துவிட்டு; கொண்டல் மேல் நிறை குன்றம் ஒன்றில் - மேகங்கள் நிறைந்த குன்றம் ஒன்றின்மேல்; மெய்ம்மெலிவு ஆற்றலுற்றான் - இலக்குவன் உடல் மெலிவை ஆற்றச் செய்தான். |
(50) |