பக்கம் எண் :

234யுத்த காண்டம் 

9598.

'சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா,
மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கி,
''சிகரம் அன்ன! யானைகொல்?'' என்னச் சில 

நாணி,

நகரம் நோக்கிச் செல்வன காண்மின் - நமரங்காள்!
 

நமரங்காள் - நம்மவர்களே!; சகரம் முந்நீர்ச் செம்புனல்
வெள்ளம் தடுமாறா
- சகரரால் தோண்டப் பெற்ற கடல்நீர்,
போர்க்கள இரத்த வெள்ளம் தம்முன் கலந்து விட்டமையால்;
மகரம் தம்மின் வந்தன காணா- மகரமீன்கள் தம்மோடு வந்து
நிற்பவற்றைக் கண்டு யானைகள்;   மனம் உட்கி - உள்ளம்
அஞ்சி; சிகரம் அன்ன யானைகொல் என்ன - மலைபோன்ற
யானைகள்   என்றெண்ணி;   சிலநாணி - சில மகரமீன்கள்
நாணத்தோடு, நகரம் நோக்கிச் செல்வன காண்மீன்- தம்
வாழுமிடமான கடலை நோக்கிப் போவனவற்றைப் பாருங்கள். 
 

(18)
 

9599.

'விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மேன்

மேல்,

மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மடிவுற்றார்,
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லாக்
கண்ணில் தோன்றார், விம்மி உளைக்கும் படி காணீர்.
 

விண்ணில்  பட்டார்- வானத்தில்  (செல்லும்  போது
இராமனின் அம்புபட்டு) இறந்தவர்களின்; வெற்புஉறழ் காயம்
பல
- மலைபோன்ற உடம்புகள் பல; மண்ணில் செல்வார்
மேனியின் மேன்மேல்  வீழ
- மண்ணுலகில் நடப்போர்
உடம்பின்   மேல்   மேலும்   வீழ்தலால்;   மடிவுற்றார் -
மடியப்பட்டவர்கள்; எண்ணில் தீரா அன்னவை தீரும் -
அளவிடமுடியாத அப்பிணங்களை நீக்கும்; மிடல் இல்லார்
கண்ணில் தோன்றார்
- வலிமை இல்லாராய் நம் கண்களுக்கு
வெளிப்படாதவராய்; விம்மி உளைக்கும்படி காணீர்- தேம்பி
வருந்தும் நிலையைப் பாருங்கள். 
 

(19)
 

9600.

'அச்சின் திண் தேர், ஆனையின், மாமேல்,

காலாளின்

மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள்

முட்ட,