பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்239

இடிகள் பல வலியற்று வீழவும்; உலகம் கீண்டு நளில் தீர்த்த
நாகபுரம்  புக்கு
- உலகைக்  கிழித்துச்  செறிவில்லாத தூய
நாகருலகில்  புகுந்து;  இழிந்த  பகழிவழி   நதியின் ஓடி-
இறங்கிய அம்பு  சென்ற  வழியில் ஆறுபோல் ஓடி;  களிறு
ஈர்த்துப் புகமண்டும்
- யானைகளை இழுத்துக் கொண்டு நாக
உலகிற்கு  புக  நெருங்கும்;  சுடுங் குருதித் தடஞ்சுழிகள்-
வேகத்துடன் வரும் இரத்தத்தின் பெரிய சுழிகளை; காண்மின்
காண்மின்
- பாருங்கள் பாருங்கள். 
 

(26)
 

9607.

'கய்த்தலமும், காத்திரமும், கருங் கழுத்தும்,

நெடும் புயமும், உரமும், கண்டித்து

எய்த்தில போய், திசைகள்தொறும் இரு நிலத்தைக்

கிழித்து இழிந்தது என்னின் அல்லால்,

மத்த கரி வய மாவின், வாள் நிருதர்

பெருங் கடலின், மற்று இவ் வாளி

தய்த்து உளவாய் நின்றது என ஒன்றேயும்

காண்பு அரிய தகையும் காண்மின்!

 

கய்த்தலமும் - யானையின் தும்பிக்கையும்; காத்திரமும்-
முன்னங்  கால்களையும்;  கருங்கழுத்தும்  -  பெரிய வலிய
கழுத்தும்; நெடும் புயமும்- நீண்ட தோள்களையும்; உரமும்
கண்டித்து 
 -  மார்பையும்  துண்டித்து; எய்த்தில போய்-
சளைக்காமல்  சென்று; திசைகள்  தொறும்  -  திக்குகள்
தோறும்;  இருநிலத்தைக்  கிழித்து  -  பெரிய நிலத்தைக்
கிழித்துக்  கொண்டு;  இழிந்தது என்னின்  அல்லால் -
பாதலத்தில் இறங்கின என்று சொல்வது தவிர; மத்த கரிவய
மாவின்  வாள்  நிருதர்
- மதமிக்க யானை வெற்றி தரும்
குதிரை, படைவீரர்கள்  ஆகிய;  பெருங்கடலின்- பெரிய
கடலின் மீது; இவ்வாளி தய்த்து உளவாய் நின்றது என-
இராமனின்  இவ்  அம்பு  தைத்துக் கிடப்பதாயிற்று  என்று;
ஒன்றேயும் காண்பு அரிய தகையும்- சிறிதும் காணற்கரிய
தன்மையும்; காண்மின்- பாருங்கள். 
 

(27)
 

கலிவிருத்தம்
  

9608.

குமுதம் நாறும் மதத்தன, கூற்றன,
சமுதரோடு மடிந்தன, சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய, இத் திறம்
அமிர்தின் வந்தன, ஐ-இரு கோடியால்.