| விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப் |
| பொருது பற்றிய, தாமரை போலுமால்.' |
|
அரிய அப்பரி - எய்துதற்கு அரிய அந்தக் குதிரைகள்; இருநிதிக் கிழவன் இழந்து ஏகின- குபேரன் (இராவணனுடன் செய்த போரில்) தோற்று விட்டு ஓடினவாம்; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் என்னும் அளவின; விரிசினத்து இகல்- விரிந்த கோபமுள்ள பகை பூண்ட; விஞ்சையர் வேந்தனை - வித்தியாதரர் அரசனை; பொருது பற்றிய தாமரை போலும்- போரில் வென்று கைப்பற்றிய எண்ணிக்கை தாமரை எனும் பேரளவின ஆம். |
(34) |
9615. | என்று, 'காணினும், காட்டினும், ஈது இறைக் |
| குன்று காணினும் கோள் இலது; ஆதலால், |
| நின்று காணுதும்; நேமியினானுழைச் |
| சென்று காண்டும்' என்று ஏகினர், செவ்வியோர். |
|
என்று காணினும் காட்டினும்- இக்களக் காட்சியை என்றும் நாங்கள் கண்டு கொண்டேயிருந்தாலும் நீ காட்டிக் கொண்டே யிருந்தாலும்; ஈது இறைக்குன்று நாணினும் கோளிலது- இது இமயமலை போன்ற பெருமலையைக் காணமுடியும் கொள்கை யுடையதன்று; ஆதலால்- எனவே; நின்று காணுதும்- சிறிது கழித்துக் காண்போம்; நேமியினான் உழைச்சென்று காண்டும் - இராமனிடத்துச் சென்று பார்க்கலாம்; என்று செவ்வியோர் ஏகினர்- என்று கூறிச் சிறந்தவராம் வானரத் தலைவர்கள் சென்றனர். |
(35) |
9616. | ஆரியன் - தொழுது, ஆங்கு அவன் பாங்கரும், |
| போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார், |
| பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும் |
| காரியத்தின் நிலைமை கழறுவாம். |
|
ஆரியன் தொழுது- உயர்ந்தோனாம் இராமனை வணங்கி; ஆங்கு அவன் பாங்கு- அங்கு அவன் பக்கத்தில்; அரும்போர் இயற்கை நினைந்து - அரிய போரின் இயல்பை எண்ணி; எழு பொம்மலார்- எழுகின்ற பெருமகிழ்ச்சியுடையோராய்; பேர் உயிர்ப்பொடு இருந்தனர்- பெருமூச்சு விட்டிருந்தனர்; பின்பு உறும்- இனிப் பின்பு நிகழும்; காரியத்தின் நிலைமை கழறுவாம் - செயல்களின் நிலைமையைக் கூறுவோம். |
(36) |