பக்கம் எண் :

244யுத்த காண்டம் 

பொருட்டுப்  போர் புரிந்து  வருந்தியவர்க்கும்; தம் அன்பின்
வந்தவர்க்கு 
-  அவ்வீரர்  தம்  மேல் வைத்த அன்பினால் 
வந்தவர்க்கும்; அருந்துதற்கு அமைவு ஆயின- உண்பதற்குப்
பொருந்தியவற்றை;    ஆக்குவான்   விருந்து   அமைக்க
- அமைத்திட்டு விருந்து செய்ய; மிகுகின்ற வேட்கையான -
மிகுந்த விருப்பம் உடையவனாய். 
 

(1)
 

9618.

வான நாட்டை 'வருக!' என, வல் விரைந்து,
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
'மான நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்' என்றான்.
 

வானநாட்டை- விண்ணவரை;வருக என- வாருங்கள் என்று
ஆணையிட்டவுடன்; வல்விரைந்து ஏனை நாட்டவரோடும் -
மிக விரைந்த மற்றையதானவர் நாட்டோடும்; வந்து எய்தினார்-
வந்து சேர்ந்தனர்; 'மான நாட்டு அந்த  போகம் அமைத்திர்
- உயர்ந்த   விண்ணவர்  நாட்டு அரிய உணவைப் படைப்பீராக;
மற்று ஊனம் நாட்டின் -  மாறாகக் குறைகள் செய்தால்; உயிர்
இழத்திர் என்றான்
- உம் உயிரை இழப்பீர் என்றான். 
 

(2)
 

9619.

நறவும் ஊனும், நவை அற நல்லன
பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த்
திறமும், நானப் புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால்.
 

நவை அற  நல்லன நறவும் ஊனும் -   குற்றமில்லாமல்
நல்லனவாகிய கள்ளும் ஊனும்; பிறவும் ஆடையும் சாந்தமும்-
பிற   உணவுப்   பொருள்களும் ஆடைகளும் பூசும் சந்தனமும்;
பெய்ம்மலர்த் திறமும் - அணிதற்குரிய மலர்வகையும்; நானப்
புனலொடு 
   -  கத்தூரி  போன்ற    மணப்பொருள்   கலந்த
குளித்தற்குரிய நறு மண நீரொடு; சேக்கையும்  - படுத்தற்குரிய
படுக்கைகளும்    ஆகியவைகள்;    புறமும்    உள்ளும் 
அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும்; நிறையப் புகுந்தன
- நிறைய வந்து சேர்ந்தன. 
 

(3)
 

9620.

நானம் நெய் நன்கு உரைத்து, நறும் புனல்
ஆன கோது அற ஆட்டி, அமுதொடும்