பக்கம் எண் :

256யுத்த காண்டம் 

நெஞ்சன் - உடலிலுள்ள புண் பிளந்தது போன்ற துன்பமிக்க
உள்ளமுடைய இராவணன்; கோபுரத்து இழிந்து போனான்-
கோபுரத்திலிருந்து இறங்கி வந்தான். 
 

(24)
 

9641.

நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய்

நக்கப்

புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற 

கண்ணன்,

மிகை பிறக்கின்ற நெஞ்சன், வெஞ் சினத் தீமேல்

வீங்கி,

சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை

சேர்ந்தான்.

 

நகை பிறக்கின்ற வாயன் - கோபச் சிறப்புத் தோன்றும்
வாயுடையவனாய்; நாக்கொடு கடைவாய் நக்க- நாக்குடன்
கடைவாய் கோபச் சிரிப்பு கொள்ளுவதால்; புகை பிறக்கின்ற
கண்ணன்
  -  தீப்பொறி   பறக்கின்ற   கண்ணுடையவனாய்;
மிகைபிறக்கின்ற நெஞ்சன்- செருக்குத் தோன்றும் நெஞ்சு
உடையவனாய்; வெஞ்சினத்தீ மேல் வீங்கி- தீயானது கொடிய
கோபத்தில் மிகுதியாக ஓங்கி; சிகைபிறக்கின்ற சொல்லன்
- கோபத்தெழுந்து தோன்றுகின்ற சொற்களை உடையவனாய்;
அரசியல் இருக்கை சேர்ந்தான்- ஆட்சி நடத்தும்
அரண்மனையை அடைந்தான். 
  

(25)