பக்கம் எண் :

258யுத்த காண்டம் 

சேனை   எது   உள்ளது?; இலங்கையுள் இருந்த சேனை
இலங்கைக்குள் இருந்த   படை;   யாதையும் எழுக என்று
எல்லாவற்றையும்   எழுக என; ஆனை   மணி முரசு எற்றுக
என்றான்
- அழகிய முரசத்தை யானைமீது ஏற்றி  அடிப்பிடிக்க
என்றான். 
  

(1)
 

9643.

எற்றின முரசினோடும் ஏழ் - இரு நூறு கோடி
கொற்றவாள் நிருதர்சேனை குழீஇயது; கொடித் திண்

தேரும்,

சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும்

தொக்க,

வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று 

ஆக.

 

ஏற்றின  முரசினோடும்  -  முழக்கிய  முரசத்துடன்; ஏழ்இரு
நூறுகோடி
- பதினான்கு நூறுகோடி;கொற்றவாள் நிருதர் சேனை-
வெற்றி பொருந்திய அரக்கர் படை; குழீஇயது- திரண்டது; வற்றிய
வேலை  என்ன
- நீர்வறண்டு போன கடல் போல; இலங்கையூர்
வறளிற்றாக
   -  இலங்கை   நகர்  வறுமையுடையதாக  ஆயிற்று;
கொடித்திண் தேரும்  -  கொடிகள்  கட்டிய   தேரும்;  சுற்றுறு
துளைக்கைம்மாவும்
  -  சுற்றிச்  சுழலும்  துளைக்  கையையுடைய
யானையும்; துரகமும் பிறவும் தொக்க  -  குதிரையும்  பிற படை
யாவையும் சேர்ந்த; 
 

(2)
 

9644.

ஈசனை, இமையா முக் கண் ஒருவனை, இருமைக்கு 

ஏற்ற

பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற 

தானம்

வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு

எல்லாம்

ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு

அமைவது ஆனான்.

 

ஈசனை  -  எல்லாச்  செல்வங்களும்  உடையவனும்; இமையா
முக்கண் ஒருவனை
- இமைக்காத  மூன்று கண்களை உடையவனும் 
ஆன சிவபெருமானை; இருமைக்கு ஏற்ற  -  இம்மை  மறுமைக்குகந்த;
பூசனை முறையின் செய்து - பூசைகளை