| 'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் |
| சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு |
| சொன்னான். |
|
'இனி ஐயம் இல்லை- இனிமேல் ஐயம் ஏதும் இல்லை; என எண்ணிய இராமன் - என்று தெளிவுற்று எண்ணிய இராமன்; நல்லவனை - நற்பண்புடைய மாதலியை நோக்கி; 'நீ உனது நாமம் நவில்க' என்ன - நீ உனது பெயரைச் சொல்லுக என்று கூற; வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் சொல்லுவர் என- வலிய இத் தேரினை ஏறிச் செலுத்துவதற்குரிய மாதலி என்று என் பெயரைச் சொல்லுவார்கள் என்று; தொழுது - வணங்கி; நெஞ்சினொடு சொன்னான்- மனமாரக் கூறினான். |
(25) |
9702. | மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, |
| 'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்' என, நின்றான் |
| ஆரியன்; வணங்கி, அவர், 'ஐயம் இலை, ஐயா! |
| தேர் இது புரந்தரனது' என்றனர், தெளிந்தார். |
|
மாருதியை நோக்கி - அனுமனைப் பார்த்து; இள வாள் அரியை நோக்கி - பின்னர் இளைய ஒளி வீசும் சிங்கம் போன்ற இலக்குவனைப் பார்த்து; 'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என - 'நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு; நின்றான் ஆரியன் - தலைவனாகிய இராமன் (தேரில் ஏறிவிடாமல்); தாமதித்து நின்றான்; தெளிந்தார் - ஐயம் தெளிந்தவராகிய அவர்கள்; 'ஐயா, ஐயம் இலை - தலைவனே!; ஐயமே இல்லை;இது புரந்தரனது தேர்- இது தேவேந்திரனுடைய தேர்தான்; என்றனர்... |
ஆரியன் என்ற சொல் பண்பின் நாயகன் என்ற கருத்துடையது என்பதையும் கருதுக. |
(26) |
9703. | விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப, |
| தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள, |
| அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று |
| எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன். |
|
நிலத்து விழுந்து புரள் தீவினை- தரையிலே விழுந்து புரளத் தொடங்கிவிட்ட தீவினை; வெதும்ப- வாடவும்; தொழுந்தகைய |