பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்291

இராமன் எதிரே தேரைவிடுமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்
 

9706.

அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், 'அமரர்

ஈந்தார்

மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய் மடித்து

எயிறு தின்றான்;

பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப் பெருந்

திண் தேரை,

மின் நகு வரி வில் செங் கை இராமன்மேல் விடுதி'

என்றான்.

  

அன்னது- அந்தத் தேரை; கண்ணின் கண்ட அரக்கனும் 
- தன்  கண்களால்  பார்த்த இராவணனும்; 'மன் நெடுந் தேர்
அமரர் ஈந்தார்'
-  'நிலை  பெற்ற  பெரிய  தேரைத்  தேவர்
கொடுத்தார்';   என்று உன்னி  - எனக் கருதி; வாய் மடித்து
எயிறு தின்றான்
- உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
பின்  -  அதன்பிறகு; 'அது  கிடக்க' - 'அது கிடக்கட்டும்';
என்னா- என்று (அலட்சியமாய்க்)  கருதியவனாய்; தன்னுடைப்
பெருந்திண் தேரை
- தன்னுடைய பெரிய வலிமையான தேரினை;
மின்  நகு வரிவில்  செங்கை  இராமன் மேல் -  ஒளியைச்
சிந்தும்   கட்டமைந்த வில்லைச் செவ்விய   கைகளில்  ஏந்திய
இராமபிரான்  மீது; விடுதி' - விடுவாயாக'; என்றான் -  என்று
(தன் பாகனுக்குக்) கட்டளையிட்டான். 
 

(3)
 

வானவர் போருக்கு ஆயத்தமாதல்
 

9707.

இரிந்த வான் கவிகள் எல்லாம், 'இமையவர் இரதம்

ஈந்தார்;

அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவுஇல்' என்று,

அஞ்சார்,

திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; 'திசையோ

அண்டம்

பிரிந்தனகொல்!' என்று எண்ணப் பிறந்தது,

முழக்கின் பெற்றி.

 

இரிந்த  -  முன்பு  சிதறியோடின; வான்கவிகள் எல்லாம் -
வானரர்கள் எல்லோரும்; 'இமையவர் இரதம் ஈந்தார்- தேவர்கள்