பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்35

கொல்வதற்கு இவ்வளவு ஆவேசப்படுகின்ற  நீ  உன் புதல்வனைக்
கொன்றவனைக் கொல்ல ஏன் பின்தங்குகின்றாய்; உன் வீரத்தையும் 
ஆவேசத்தையும்  அவரிடமன்றோ  காட்டவேண்டுமென்பதனையும் 
குறிப்பால் உணர்த்துகின்றான். கூசுதல் - மனம் பின்வாங்குதல். 
 

(60)
 

இந்திரசித்தின் உடலைத் தைலத்தோணியில் இடப் பணித்தல்
 

9246.

என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, 

மீண்டு,

மன்னவன், 'மைந்தன்தன்னை மாற்றலார் வலியால் 

கொண்ட

சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு 

அன்றிச் சேர்கேன்;

துன்னரும் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் 

சொன்னான்.

 

என்னலும், எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு- என்று
மகோதரன் கூறிய அளவில் தான் சீதையை வெட்ட எடுத்த கூரிய
வாளைப்  பெரிய  நிலத்தின்  மேல்   போட்டுவிட்டு; மன்னவன்
மீண்டு
- மன்னவனாகிய இராவணன் தான் செய்யக்கருதியதினின்றும் 
மீண்டு;   'மைந்தன்  தன்னை மாற்றலார் வலியால்  கொண்ட 
சின்னமும்
- 'மைந்தன் இந்திரசித்தினை பகைவர்கள் வலிமையால் 
கொன்று கொய்து (தம்) வெற்றிக்குச் சின்னமாகக் கொண்டு சென்ற
தலையினையும்; அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச்
சேர்கேன்
- (பழிக்குப் பழியாக) அப்பகைவர் தங்கள் தலையையும் 
கொண்டல்லது   இங்கு   வாரேன்;  துன்னரும் தயிலத்தோணி 
வளர்த்துமின்'   என்னச்   சொன்னான்
  -  நெருங்குதற்கரிய 
எண்ணைத் தாழியில் இந்திரசித்தின் உடம்பை இட்டு வையுங்கள் 
என்று கூறினான். 
 

(61)