பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்37

தூதர்கள்; ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர்- ஒரு சேர
நெருங்கி   வந்து   வணங்கினராய்;   இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அடைந்த
- (அரசே!) இலங்கையாகிய உனது ஊரில்
வரிசையாக வந்து அமைந்த; தானைக்கு இடம் இலை; பணி
என்?'  என்றார்
-   சேனைக்கு  இடம் இல்லை; இனி, யாம்
செய்யத்தக்க பணி என்ன?' என்று வினவினார்கள்.
 

அத்தொழில் - இந்திரசித்துவின் உடலைத் தயிலத் தோணியில்
இடும் தொழில். ஆயிடை - அவ் + இடை. அனைத்துத் திக்கும் -
திக்கு அனைத்தும். பொத்திய - நிரம்பிய.
 

(1)
 

9248.

ஏம்பலுற்று எழுந்த மன்னன், 'எவ் வழி எய்திற்று?' 

என்றான்;

கூம்பலுற்று உயர்ந்த கையர், 'ஒரு வழி கூறலாமோ? 

வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது 

என்னாத்

தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் 

இல்லை' என்றார்.

 

ஏம்பலுற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று?' என்றான்
- மகிழ்ச்சியுற்று எழுந்த இராவணன் (அப்படை) எவ்விடத்து வந்துளது?
என வினவினான்;  கூம்பலுற்று  உயர்ந்த கையர் - குவிந்து உயர்ந்த
கையை   உடையவர்களாகிய   தூதுவர்கள்;  'ஒருவழி  கூறலாமோ?
வாம்புனல் பரவை எழும்
- (அச்சேனை  இன்ன இடத்தில் இருந்தது
என்று சுட்டி)  ஓரிடத்தைச்  சொல்லுதல் கூடுமோ?  அலைகள் தாவிச்
செல்லுகின்ற கடல்கள் ஏழும்; இறுதியின் வளர்ந்தது என்னா - ஊழி
இறுதியில்  பொங்கிப்   பரந்தது என்னுமாறு; தாம் பொடித்து எழுந்த
தானைக்கு உலகு இடம் இல்லை' என்றார்
- தாமே கிளர்ந்து எழுந்த
சேனை   தங்குவதற்கு  உலகம்  இடமுடையதாக   இல்லை  என்று
கூறினார்கள்.
 

ஏம்பல் - மகிழ்ச்சி. கூம்பல் உற்று உயர்ந்த கையர் என்றது சிரமேற்
குவிந்த   கரத்தவர்   என்றவாறு.   ''கூம்பலங்கைத்தலத்  தன்பரென்
பூடுருகக்குனிக்கும்''      (திருக்கோவை  -  11)   ''குவிகையேவலர்''
(குசேலர் - 2:78)   எவ்வழி  எய்திற்று?  என்ற வினாவிற்கு ''ஒரு வழி
கூறலாமோ?'' என்ற வினவிப் பதிலிறுத்தனர் தூதர். 'அரக்கர் தானைக்கு
உலகில் இடமில்லை'  என்றதனால்  அது  இறந்துபடும் என்ற குறிப்புப்
பொருளும் தொக்கது.

(2)