உண்ணும் நீர் உகுத்தல் - வாசோதகம் திலோதகம் கொடுத்தல் என்பர். |
(247) |
9951. | வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும் |
| 'சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்! |
| முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா, |
| அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். |
|
வந்து தாழ்ந்த துணைவனை - (தன்முன்) வந்து அடியிற் பணிந்த தம்பியாகிய வீடணனை; வள்ளலும்- வள்ளலாகிய இராமபிரானும்; தெள்ளியோய்- உலகந் தெளிவுற்ற மேலோனே!; சிந்தை வெம் துயர் தீருதி- (உன்) மனத்தே நிறையும் கொடுந்துயரை நீக்குவாயாக; அது முந்தை எய்தும் முறைமை ஆம்- (இறந்தோரால் எய்தும் துயர் துடைத்து ஆறுதல் கொள்வதே) முந்தையோர் கொண்ட முறைமையாகும்; எனா - என்று; அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான் - (வீடணன் கொண்ட) முடிவற்ற துன்பச்சுமையை (இராமபிரான் தன் இன்னுரைகளால்) நீக்கியருளினான். |
வீடணன் தெளிந்த உள்ளங் கொண்டோனாதலின் உணர்வான் என்று கருதி, பெருமான் ''தெள்ளியோய்!'' என்று அழைத்தான். |
(248) |