பக்கம் எண் :

 மீட்சிப் படலம்599

விரை செறி அலங்கல் மாலைப் புட்பக விமானம்' 

என்றுஎன்று,

உரைசெய்து, வான் உளோர்கள் ஒண் மலர் தூவி

ஆர்த்தார்.*

 

வான் உளோர்கள் -  தேவர்கள்; விரை செறி அலங்கல்
மாலைப் புட்பகவிமானம் உரைசெயின்
- மணமிக்க  மலர்
மாலை அணிந்த இந்த   புட்பக விமானம்  பற்றிச்  சொல்லப்
புக்கால்;  உலகம் உண்டான் மணி அணி உதரம்  ஒவ்வா
-  உலகம்  உண்டவனாகிய  திருமாலின்  அழகு  பொருந்திய
திருவயிறும்   உவமையாகாது;  கரைசெயல்   அரிய வேதக்
குறுமுனி   கையும்   ஒவ்வா 
-  கரை   காண   முடியாத
வேதங்களை உணர்ந்த அகத்திய முனிவனது (கடலை அடக்கிய)
கையும் உவமையாகாது; என்று என்று- என்று கூறி; ஒண் மலர்
தூவி  ஆர்த்தார் 
-  ஒள்ளிய  மலர்களைத் தூவி ஆரவாரம்
செய்தனர்.
 

உலகை  அடக்கிய  வயிறும்,  கடலை  அடக்கிய  கையும்
புட்பகத்துக்கு ஒவ்வா என்றதாம்.
 

(337)
 

10289.

அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து 

ஆர்த்ததென்ன,

விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் 

சங்கும்,

இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து  

பொங்கி,

திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின்

தீர்ந்த.

 

விசையுறு முரசும்- வேகமாக அடிக்கப் பெறும் முரசு ஓசையும்;
வேதத்து ஓதையும் - வேத ஓசையும்; விளிகொள் சங்கும்-  சங்க
நாதமும்; இசை உறுகுரலும் - இராகம் கூடிய வாய்ப் பாட்டொலியும்;
ஏத்தின் அரவமும்- தோத்திர முழக்கொலியும்; எழுந்து பொங்கி
- மேலே புறப்பட்டுச் சென்று; திசை உறச் சென்று- நாலா பக்கமும்
அளாவி; வானோர்  அந்தரத்து  ஒலியின்- தேவர்கள் மகிழ்ச்சிப்
பெருக்கால்  மேலே   செய்யும்   ஆரவாரத்தின்   கண்;  தீர்ந்த
ஒலியடங்கிப் போயின;
 

தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தின் மிகுதி உணர்த்தியது.
 

(338)