- தென் மேற்கு திசையில் தோன்றுகின்ற; நந்தியம்பதியை நீங்கி - நந்திக் கிராமத்தினின்றும் புறப்பட்டு; கொடி மதில் அயோத்தி மேவ - கொடிகளால் அழகு பெற்றிருக்கும் மதில் சூழ்ந்த அயோத்தி நகரை அடையும் பொருட்டு; சுருதி ஒத்தனைய- வேதங்களுக்கு நிகரான;வெள்ளை துரகதக் குலங்கள் பூண்டு - வெண்ணிறப் புரவிகள் பூட்டப் பெற்ற; பருதி ஒத்து இலங்கும் - கதிரவனைப் போல் ஒளி வீசும்; பைம்பூண் பருமணித் தேரின் ஆனான்- பசும்பொன்னால் புனையப் பெற்ற பெருமணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது ஏறினான். |
நிருதி - தென்மேற்குத் திசைக் காவலன். |
சத்துவம் நிறைந்தவை வேதங்கள். சத்துவம் வெண்ணிறம் என்பர். வெள்ளைப் புரவிகட்கு அதனால் வேதங்களை ஒப்பிட்டார். |
(2) |
தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல் |
10292. | ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் |
| தேரின், |
| ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்த, |
| பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரி பற்ற, |
| பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் |
| கொள்ளப் போனான். |
|
ஊழியின் இறுதி காணும் - யுக முடிவின் எல்லை காணவல்ல; வலியினது - உறுதி மிக்கதான; உயர்பொன் தேரின் - உயர்ந்த பொன்னாலாகிய தேரில்; ஏழ் உயர் மதமா அன்ன - ஏழு முழ உயரமுள்ள மதம் செறிந்த யானை போன்ற; இலக்குவன் - (இளையவனாகிய) இலக்குவன்; கவிகை ஏந்த - வெண் கொற்றக் குடையைப் பிடித்து நிற்கவும்; பாழிய மற்றைத் தம்பி - வல்லமை மிக்க இன்னொரு தம்பி (சத்துருக்கன்); பால் நிறக் கவரி பற்ற- வெண்ணிறமான சாமரையை ஏந்தவும்; பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் - இந்தப் புவியையே மறைக்கவல்ல உவகைக் கண்ணீர் சிந்தும் பரதன்; கோல் கொள்ள - குதிரைகளை ஏவும் கோலைக் கொண்டு செலுத்தவும்; போனான்- (இராமபிரான்) சென்றான். |
ஏழு முழம் உயர்ந்திருத்தல் பட்டத்து யானையின் சிறப்பு. புழுதி என்பது மண்ணாதலின் பூமிஎனப் பொருள் பெற்றது. |
(3) |