| சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை | |
| செய்யும், | |
| அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக | |
| வாழி. | (37-2) |
| | |
1292. | வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்! | |
| வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த | |
| வள்ளல்! | |
| வாழிய, வலி மார்பும் மராமரம் ஏழும் சாய, | |
| வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! | |
| | (37-3) |
| | |
1293. | இராவணன்தன்னை வீட்டி, இராமனாய் வந்து | |
| தோன்றி | |
| தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப் | |
| பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள் | |
| நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. | |
| | (37-4) |