பக்கம் எண் :

பக்கம் : 1139
 

     சுரிகுழல் மடந்தை என்னும் தோகை, மன்னர் என்னும் மலைகளை ஆராய்ந்து
பார்த்து, ஆழி வேந்தன் திருமகனாகிய விசயன் என்னும் மலையின் குவட்டைத் தான்
இனிது தங்குதற்குரியதாகத் தேர்ந்து விரும்பியதென்க.

     சுதாரை விசயனுக்கு மாலைசூட விரும்பினாள் என்றபடி.

(704)
 
சுதாரை விசயனை மாலை சூட்டல்
1835. மாதராள் சுதாரை வாட்கண்
     மலரொடு மணிவண் டார்க்கும்
போதுலாம் பிணையல் வீரன்
     பொன்வரை யகலஞ் சூழ
ஏதிலா மன்னர் வாட
     2விருபுடைக் கிளைஞ ரெல்லாம்
காதலாற் களித்துச் செல்வக்
     கடிவினை முடிவித் தாரே.
 
     (இ - ள்.) மாதராள் சுதாரை - எழில் மிக்கவளாகிய சுதாரை என்பாளுடைய,
வாட்கண் மலரொடும் - வாள் போன்ற கண்ணாகிய மலருடனே, மணி வண்டார்க்கும் -
மணி நிறம் படைத்த வண்டுகள் ஆரவாரிக்கும். போது உலாம், பிணையல் - மலர் பொருந்
ிய (சுதாரையாற் சூட்டப்பட்ட) மாலையும், வீரன் - விசயனுடைய, பொன்வரை அகலம் சூழ
- பொன் மலையை ஒத்த மார்பிலே பொருந்தா நிற்ப, ஏதிலா மன்னர் வாட - பிறராகிய
அரசர் எல்லாம் மனம் புழுங்க, இருபுடைக் கிளைஞர் எல்லாம் - இருபக்கத்தும் உளராகிய
கேளிர்கள் எல்லோரும், காதலால் களித்து - அன்பாலே மகிழ்ச்சிமிக்கு, செல்வக் கடிவினை
முடிவித்தார் - செல்வ மிக்க திருமண வினையை நிகழ்த்தி முற்றுவித்தார்,
(எ - று.)

     இருபுடைக் கிளைஞர் -மணமகன் மணமகளாகிய இருவருடைய உறவினர்.

     சுதாரையின் கண் மலரோடே பிணையலும் விசயன் அகலஞ் சூழ ஏதிலா மன்னர்
வாட இருபுடைக் கிளைஞர் எல்லாம் களித்து மணம் முடித்தனர் என்க.

(705)

 
சுதாரையும் விசயனும் காமந்துய்த்தல்
1836. கழல்வலம் புரிந்த நோன்றாட்
     கடல்வண்ணன் புதல்வன் காமர்
குழல்வலம் புரிந்த 2கோதை
     குழைமுகம் வியர்ப்ப வேட்டான்
அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங்
     கத்தொழின் முடித்த பின்னைத்
தழல்வலம் புரிந்த வேலான்
     றடமுலை வாரி சார்ந்தான்.
 

     (பாடம்) 1 விரும்புடைக், விளங்கிளைச் சுற்றமெல்லாம். 2தோகை.