பக்கம் : 1277 | | “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு“ “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி னருளாதான் செய்யு மறம்“ என்னும் மெய்ம்மொழிகளை இதன் கருத்துடன் நோக்குக. திருவின் செல்வி - செல்வம். மாந்தர்க்கு “கற்றனைத் தூறும் அறிவி“ என்பவாகலின் கல்லாதார் அறிவிலர் என்றார். பெருஞ் செல்வம் உற்றவிடத்தும் அதனை நெறியறிந்து துய்த்தற்கும் அறிவு வேண்டும். அறிவு இல்லாதவர் “ என்னுடைய ரேனும் இலரா“ தல் பற்றித் “தெருளிலார்க்கத் திருவின் செல்வி இசைவிலள்“ என்றார். | ( 13 ) | பொருளின் இயல்பு | 2082. | திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேன் மருவிய மனிதரை யிகந்து மற்றவள் பொருவறு 1புகழினர் புதிய காமுறும் ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே. | (இ - ள்.) திருமகள் நிலைமையும் - திருமகளின் தன்மையையும், செல்வர் - என் அருமை மைந்தீர்!, கேட்டிரேல் - வினவுதிராயின், அவள் - அத்திருமகள், மருவிய மனிதரை இகந்து - முன்னர்த் தன்னைக் காமுற்றுச் சேர்ந்த மனிதர்களை நீங்கி, பொருவறு புகழினர் - ஒப்பற்ற புகழுடையர் பிறரை, புதிய காமுறும் - புதிதாக விழைந்து சேர்வள், ஒருவர்கண் உறவிலள் - அவள் தான் மருவிய ஒருவரிடத்தேனும் கேண்மை கொண்டு நிற்பாளல்லள், உணர்ந்து கொண்மினே - இவ்வுண்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கோள், (எ - று.) “அற்கா வியல்பிற்றுச் செவ்ம் அதுபெற்றா லற்குப வாங்கே செயல்“ என்னும் மெய்ம்மொழியை நோக்குக. இதனாற் செல்வ நிலையாமை கூறப் பட்டது. ஒருவர்கண் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. | ( 14 ) |
| (பாடம்) 1 புகழனிர். | | |
|
|