பக்கம் : 411 | | | 578. | இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும் அங்கு வேந்தனை யணைந்த வாயிலும் பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந் தொங்கன் மார்பினாய் சொல்லு 1கோனெனா. | (இ - ள்.) தொங்கல் மார்பினாய் - வெற்றிமாலையை அணிந்த மார்பையுடைய அரசே!, இங்கு நின்று - யான் இவ்விடத்தினின்றும் புறப்பட்டு, போய் - போதனமாநகர்க்குச் சென்று, இழிந்த - இறங்கிய, சூழலும் - புட்பமாகரண்டம் என்னும் பொழிலின் பெற்றியும், அங்கு - அவ்விடத்தே, வேந்தனை - பயாபதி அரசனை, அணைந்த வாயிலும் - சென்று கண்ட வழியும், பொங்கு தானையான் - சினத்தாற் கொதிக்கும் பெரும்படைகளையுடைய அப் பயாபதி மன்னன், புகன்ற - எனக்குரைத்த, மாற்றமும் - மொழியும், சொல்லுகேன் எனா - சொல்வேன் கேட்டருள்க என்று தொடங்கி, (எ - று.) பொங்குதானை - மிகுந்தபடை எனினுமாம். மார்பினாய்! யான் இங்கு நின்றுபோய் இழிந்த சூழலும், வேந்தனை அணைந்த வாயிலும், தானையான் புகன்ற மாற்றமும், சொல்லுகேன் என்றான் என்க. | ( 6 ) | | 579. | அள்ளி-லைச்செழும் பலவி னார்சுளை முள்ளு டைக்கனி 2முறுகி விண்டெனக் கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும். | (இ - ள்.) அள் இலை செழும் பலவின் - செறிந்த இலைகளாற் றழைத்த பலாமரத்தினது, ஆர் சுளை - நிரம்பிய சுளைகளையும், முள் - புறந்தோலின்கண் முட்களையும், உடைக்கனி - உடைய பழம் முறுகி - முதிர்ந்து, விண்டு என - வெடித்தனவாக அவை, கள் உறைத்தொறும் - தேனை இடையறாது துளித்தலால், கழுமி - அத்தேன் பெருகி, ஊற்றறா - அருவியாகப் பாய்தலை ஒழியாத, வள்ளிலைப் பொழில் - வளமிக்க இலைகளாற் செறிந்த புட்பமாகரண்டம் என்னும் பூம்பொழிலின்கண், மகிழ்ந்து - மனமகிழ்ச்சிகொண்டு, புக்கதும் - புகுந்த செய்தியும், (எ - று.) ஆர்சுளை - பொருந்தியசுளை எனினுமாம். முறுகி விண்ட பலாக் கனி மிகுதியாகத் தேன்றுளித்தலால் என்க. பொறிகளுக்குப் பேரின்பததைப் பொழில் நல்கியதாகலின் மகிழ்ந்து புக்கதும், என்றான், | ( 7 ) |
| (பாடம்) 1. நன்கெனா. 2. முறுதீ. | | |
|
|