| பக்கம் : 42 | | | | நெகிழினும் பொறாது. அல்லல்கூர் பெடை“ என்றார் நைடதத்தினும். காதலரைத் துறந்த பெண்டிர்க்கு ஏனைய பெண்டிர் இரங்குதல் பெண்மையியல்பு; இதனை உலகியலிற் காணலாம். மேலும், “மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார்“ எனவரும் பழம் பாடலானும் (தொல் - புறத் - 13 - மேற். நச்) உணர்க. இனி மாடங்களில் அன்னங்களை வளர்க்கும் வழக்கத்தை “தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து, நெடுமயிரெகினத் தூநிற ஏற்றை, குறுங்கால் அன்னமொடு உகளும் முன்றில்“ எனவரும் நெடுநல்வாடையான் அறிக. ( 91-2 ) | | ( 11 ) | | அரசர் தெருவழகு | | 47. | 1விலத்தைகைப் பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய அலத்தகக் 2குழம்புதோய்ந் தரச வீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. | (இ - ள்.) விலத்தகைப் பூந்துணர் - நீர்நிலையின்கண் உண்டான அழகிய பூங்கொத்துக்கள்; விரிந்த கோதையர் - மலர்ந்துள்ள மாலை அணியப்பெற்ற கூந்தலையுடைய பெண்கள்; நலம்தகை சிலம்பு அடி - நல்ல தன்மை யமைந்த சிலம்பென்னும் காலணியை அணிந்த கால் அடிகளில்; நவில ஊட்டிய - பொருந்தும்படியாக ஊட்டப்பெற்ற; அலத்தகம் குழம்பு தோய்ந்து - செம்பஞ்சுக் குழம்புதோயப்பட்டு; அரச வீதிகள் - அந்நகரத்து அரண்மனைத் தெருக்கள்; புலத்திடை தாமரை பூத்தபோலும் - புலத்திடத்தே தாமரைமலர் மலரப்பெற்றாற் போல விளங்கும். ( எ - று.) விலம் - பிலம் என்பதன் மரூஉ; நீர்நிலை. தகை - அழகு மகளிர் அடிகளில் ஊட்டப்பெற்ற செம்பஞ்சுக் குழம்பின் செந்நிறம் பட்ட இடங்கள் செந்தாமரை பூத்தாற் போன்று விளங்குகின்றன என்க. மகளிர் அடி தாமரை மலர் போலுதலின் அவற்றின் சுவடு தாமரை போன்று தோன்றின என்பது கருத்து, புலம், - வயல், இடம், திசை, திக்கு, நாடு, அறிவு, துப்பு, நூல். | | ( 12 ) | | (பாடம்) 1. விலத்துகைப் பூந்துணர், 2. கொழம்பு. | | |
|
|