பக்கம் : 548 | | (இ - ள்.) களியவாய் விலங்கி நீண்டு - கரிய நிறமுடையனவாய் விலகி நீளியவாய், களிக்கயல் இரண்டு தம்முள் - களிப்புடைய இரண்டு கயல்மீன்கள் தம்முள் எதிர்ந்து, பொரிய - போர்செய்தற்கு, போகின்ற போலும் - செல்வதை நிகர்த்த, பொங்கு அரி தடம் கண் பேதைக்கு - மிக்க செவ்வரிபடர்ந்த அகன்ற கண்களையுடைய சுயம்பிரபையை, உரிய மாலவற்குச் சென்று கொடுப்பன் என்று - மணம்புணர்தற்கு உரியவனான திவிட்டனுக்கு அழைத்துக் கொடுபோய் மணம் செய்யக் கொடுத்திடுவேன் என்று, உலகம் காக்கும் பெரியவன் - உலகத்தைக் காவல்செய்யும் பெருமையுடைய சடிவேந்தன், தமரோடு எண்ணி - தன் அமைச்சரோடு ஆராய்ந்து தெளிந்து, கடிவினை - மணவினைக்குரிய செயல்களை, பெருக்கலுற்றான் - செய்யத் தொடங்கினான், (எ - று.) பொரிய - பொர; போர்செய்ய. அரி - வரி. பேதை - சுயம்பிரபை. பெரியவன் - சடி. தமர் - அமைச்சர் முதலியோர். கடிவினை - திருமணச் செயல். | ( 3 ) | சடிமன்னன், பிரீதி வருத்தனன் முதலிய எண்மரையும் அழைத்துத் தன் அரசியலை ஒப்புவித்தல் 1. பிரீதிவர்த்தனன் | 830. | கிளரொளி மாடக் கோயிற் கின்னரர் கெழுவ லோவா வளரொளி வயங்கு தோன்றல் 1வருத்தமா னத்து மன்னன் உளரொளி யுமிழும் பூணான் 2பிரீதிவர்த் தனனென் றோதும் தளிரொளி தயங்கு மேனித் தாமரைச் செங்க ணானே. | (இது தொடங்கி எட்டுச் செய்யுள் ஒருதொடர்) குளகம். (இ - ள்.) இளர்ஒளி மாடக்கோயில் - ஒளிவீசும் மாடங்களையுடைய தன் அரண்மனையின்கண், கின்னரர் கெழுவல் ஓவா - கின்னரர்கள் வந்து நெருங்குதலை ஒழியாத, வளர் ஒளி வயங்கு தோன்றல் - வளர்கின்ற புகழாலே திகழ்தலுடைய பெரியோன், வருத்தமானத்து மன்னன் - வருத்த மானம் என்னும் நாட்டினை ஆளும் அரசனும், உளரொளி உமிழும் பூணான் - சலித்தற்றன்மையுடைய ஒளிவீசும் அணிகலன்களையுடையவனும், பிரீதிவர்த்தனன் என்று ஓதும் - பிரீதிவருத்தனன் என்று புகழ்ந்து கூறப்படுபவனும், தளிர் ஒளி தயங்குமேனி - தளிர்போன்ற ஒளிதிகழும் திருமேனியை உடையவனும், தாமரைச் செங்கணானும் - செந்தாமரைபோலச் சிவந்த கண்களையுடையவனும். |
| (பாடம்) 1. வகுத்த. 2. விருதி மாவருத்த னென்பான். | | |
|
|