பக்கம் எண் :

பக்கம் : 557
 
அருக்க கீர்த்தியின் எழுச்சி
845. வாரணி முரச மார்ப்ப வரிவளை வயிரொ டேங்கத்
தாரணி மறவர் சூழத் தமனியக் கலங்க டாங்கி
ஆரணி யுருவத் திண்டே ரானைமே லருக்க கீர்த்தி
நீரணி கடலந் தானை நிலநெளி 1பரப்பி நின்றான்.
 

      (இ - ள்.) வார் அணி முரசம் ஆர்ப்ப - வாரால் இறுக்கப்பட்ட அழகிய முரசம்
முழங்கவும், வரிவளை வயிரோடு ஏங்க - வரிகள் பொருந்திய சங்கங்கள் கொம்புகளோடு
ஒலிப்பவும், தார் அணி மறவர்சூழ - வெற்றிமாலை சூடிய போர்மறவர்கள் தன்னைச்
சூழ்ந்து வரவும், தமனியக் கலங்கள் தாங்கி - பொன் அணிகலன்களைப் பூண்டு,
ஆனைமேல் - சிறந்த யானையிலமர்ந்து, அருக்ககீர்த்தி - சடிமன்னன் மகனாகிய
அருக்ககீர்த்தி, ஆர் அணி உருவத்திண்தேர் - ஆர்க்கால்களையுடைய எழில்மிகு தோற்றம்
வாய்ந்த திண்ணிய தேர்முதலிய, நிர் அணிகடலந்தானை - நீர்மிக்க கடல்போன்ற தன்
படைகளை, நிலம்நெளி பரப்பி நின்றான் - நிலம் முதுகுளுக்குமாறு பரப்பி நின்றான்,
(எ - று.)

     நெளிய என்னும் எச்சம் ஈறுகெட்டு நெளி என நின்றது. அருக்ககீர்த்தி - சடியரசன்
மகன். முரசம் ஆர்ப்பவும், வளை வயிரோடு ஏங்கவும், மறவர் சூழவும், அருக்கக்கீர்த்தி
கலன்கள் தாங்கி, தானையை நிலம் நெறியப் பரப்பி யானைமேல் நின்றான் என்க.
 

( 19 )

சடிமன்னன் வானஊர்தி இயற்றல்
846. சேனைபண் ணமைத்துச் சென்று திருக்கடை செறிந்த போழ்திற்
றானையுள் படுநர் மாண்பிற் றாரவற் றொழுது கூற
வேனவிற் றடக்கை வேந்தன் விண்ணியல் விமான மொன்று
வானவில் லுமிழ்ந்து மின்ன மனத்தினா னிருமித் திட்டான்.
 

     (இ - ள்.) சேனை பண் அமைத்துச் சென்று - இங்ஙனம் படை ஒப்பனை
செய்யப்பட்டுப்போய், திருக்கடை செறிந்த போழ்தில் - அரண்மனை வாயிலிற்
கூடியவுடனே, மாண்பின் தாரவர் - மாட்சிமையுடைய மாலையணிந்தவரும், தானையுள்படுநர்
- படையுள் இருந்து தொழில் செய்வோரும் ஆகிய தூதுவர்கள், தொழுதுகூற - சடியரசனை
வணங்கிச் சொல்ல, வேல்நவில் தடக்கை வேந்தன் - வேற்படையை ஏந்திய பெரிய
கையையுடைய சடியரசன், விண் இயல் விமானம் ஒன்று - விசும்பில் இயங்கும் இயல்
புடையதொரு விமானத்தை, வானவில் உமிழ்ந்து மின்ன - வானவில்லைப்போன்று பல்வேறு
ஒளிகளையும் பரப்பி மின்னும்படி,  


     (பாடம்) 1. பரப்ப.