திவிட்டன் சிறந்தவனே என்றல் |
113. | 1நற்றவ முடையனே நம்பி யென்றுபூண் விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக் கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார். |
(இ - ள்.) நம்பி - திவிட்டன்; நல்தவம் உடையனே - நல்ல தவத்தை யுடையவனே யாவன்; என்று - என்று கூறி; பூண் வில் தவழ் - அணிகலன்களின் ஒளிதவழ்தலோடு; சுடர் ஒளி விளங்கும்மேனி - இயற்கையொளி விளங்குகிற உடலையுடைய; அக்கொற்றவன் குறிப்பினை - அப் பயாபதி மன்னன் குறிப்பினை; அறிந்துகூறிய - நூன்முறைப்படி அறிந்து கூறுதற்கு; மந்திரத்து உளார் அவர் தொடங்கினார் - ஆராய்ச்சி மன்றத்திலிருந்த அமைச்சர்கள் தொடங்கினார்கள். (எ - று.) அமைச்சர் திவிட்டனுடைய குணங்குறிகளைப்பற்றிப் பயாபதி மன்னனிடம் சொல்லத் தொடங்கினார்கள். தவம் - செல்வத்திற்குக் காரணமானது. “இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலாதவர்“ என்னுந் திருக்குறளுங் காண்க. நோற்றல் - தவஞ் செய்தல். கூறிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மந்திரத்துளார் கொற்றவன் குறிப்பறிந்து திவிட்டன் நீர்மையான், அலரும் என்பது பண்டுங் கேட்டும், உடையன் என்று மேலுங் கூறத் தொடங்கினார் என்க. |
( 44 ) |
வேறு திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல் |
114. | சங்க லேகையுஞ் சக்கர லேகையும் அங்கை யுள்ளன வையற் காதலால் சங்க பாணியான் 1சக்க ராயுதம் அங்கை யேந்துமென் 2றறையல் வேண்டுமே. |
(இ - ள்.) ஐயற்கு - சிறந்தவனான திவிட்டனுக்கு; சங்கலேகையும் - சங்கத்தின் வடிவமுள்ள கோடுகளும்; சக்கரலேகையும் - உருளையின் வடிவமுள்ள கோடுகளும்; அம்கை உள்ளன - அகங்கைகளிலே இருக்கின்றன; ஆதலால் - ஆகையால்; சங்கபாணியான் - சங்கத்தைக் கையிலேயுடைய திருமாலான இவன்; சக்கர ஆயுதம் - உருளைப் படையை; அங்கை ஏந்தும் என்று - அகங்கைகளிலே தாங்குவான் என்று; அறையல் வேண்டும் - கூறுதல் வேண்டும். (எ - று.) |
|
(பாடம்) 1. சக்கிராயுதம். 2. அறைய வேண்டுமோ. |