பளிங்குமேடை யமைத்துக் காவல்வைப்போம் என்றல் |
116. | நாமினி மற்றவன் மொழிந்த நாளினால் தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம் 1தூமரு மாலையாய் துரும காந்தனைக் காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே. |
(இ - ள்.) தெய்வமாம் - தெய்வத்தன்மை பொருந்திய; தூமரு மாலையாய் - தூயமணம் வீசும் மாலையை அணிந்தவனே; நாம் இனி - நாம் இனிமேல்; அவன்மொழிந்த நாளினால் - அந்நிமித்திகன் கூறிய நாளில், தே மரு சிலா தலம் - இனிமை பொருந்திய பளிங்கு மேடையை; திருத்தி - திருத்தமாக அமைத்து; துருமகாந்தனை - துருமகாந்தன் என்பவனை; காமரு பொழிலிடை - விருப்பத்தை யுண்டுபண்ணுகிற பொழிலினிடத்தே; காவல்வைத்தும் - விஞ்சையர் தூதனது வரவையறிதற் பொருட்டுக் காவலாக வைப்போம். ஏ - ஈற்றசை. மற்று - அசை. (எ - று.) அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறையாதலால், பயாபதி மன்னன், “தெய்வமாம் தூமரு மாலையாய்“ என்று விளிக்கப் பெற்றான். தெய்வம் ஆம் தூமருஎன எடுத்து - தெய்வத் தன்மையுள்ள நறுமணம் என்றுங் கொள்ளலாம். துருமகாந்தன் என்னும் வட சொல்லுக்குப் பொருள் மரங்களிடத்தில் விருப்பமுடையவன் என்பதாம். வைத்தும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. |
( 47 ) |
அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல் |
117. | என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான் நன்றது பெரிதுமென் றருளி நாடொறும் சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல் இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான். |
(இ - ள்.) என்று அவர் மொழிந்தபின் - மேற்பாட்டில் முடித்தாங்கு அமைச்சர்கள் கூறிய பிறகு; இலங்கு பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களை யணிந்த பயாபதி மன்னன்; அது பெரிதும் நன்று என்று அருளி - நீங்கள் கூறியாங்குப் புரிதல் மிகவும் நல்லது என்று கூறி; நாள்தொறும் சென்று அவன் காக்க என மொழிந்து - தினந்தோறும் |
|
(பாடம்) 1. தூமரு மாலை யான். |