இரதநூபுரம் ஒன்பது வித்தியாதர நகரங்களில் ஒன்று. இச்சருக்கத்தின்கண் சேடிநாட்டின் சிறப்பும், அதன் தலைநகரான இரதநூபுரத்தின் சிறப்பும், அந்நகரின்கண் இருந்து ஆட்சிபுரியும் சுவலனசடி யென்னும் அரசனுடைய அரசியல் நலமும், அவன் மக்களுள் சுயம்பிரபை என்பவளின் பெண்மை நலமும், அரசன் வேனில் நுகர்வு குறித்துப் பூஞ்சோலை சென்று இன்புறுதலும், சாரணரைக் கண்டு அறங்கேட்டலும், அவன்மகள் சுயம்பிரபை சக்கரவாளமென்னும் நோன்பு நோற்று மாண்புறுதலும், அவள் மாண்புகண்டு அவட்குக் கணவனாவான் யாவன் என வேந்தன் தன் மனத்தே பலபட நினைத்து, அமைச்சர் முதலிய சான்றோரைத் தன் மந்திர சாலைக்கு வருமாறு ஏவலரை விடுத்தலும் பிறவுங் கூறப்படுகின்றன. |