பக்கம் எண் :


114மேருமந்தர புராணம்  


 

சண்டமது  எய்தி  -  பத்மஷண்ட  புரத்தையடைந்து, என்வழி - என்
சம்பந்தமாக, தொக்க -  சேர்ந்திராநின்ற, சுற்றமும் - பந்துக்களையும்,
ஓர் பாங்கிலே - ஒரு பக்கமாக,  அழைத்து  -  அழைத்துக்கொண்டு,
பின் - பிற்பாடு, எ-று.                                    (19)

 243. பீடி னாற்பெயர்ந் திங்குவந் தோங்கிய
     மாட மாநக ரத்திடை வாழ்க்கைமேல்
     ஒடு முள்ளத்த னொண்பொருள் வைப்பிடந்
     தேடு வான்சிரி பூதியை நண்ணினான்.

     (இ-ள்.)  பீடினால்  -  பெருமையோடு,  பெயர்ந்து  - திரும்பி
இங்குவந்து  -  இந்த ஸிம்ம மஹாபுரத்தில் வந்து,  (சேர்வேன் என்று)
ஓங்கிய   -   உன்னதமான,   மாடம்   -   உப்பரிகைகளையுடைய,
மாநகரத்திடை   -   அப்பெரிய   பட்டணத்தில்,   வாழ்க்கைமேல் -
செய்யும்படியான   வாழ்க்கையின்மீது   (அதாவது :  அவ்விடத்திலே
வசிப்பதில்),     ஓடும்     -      செல்லுகின்ற,     உள்ளத்தன் -
மனத்தையுடையவனாய்,  ஒண்பொருள்   -   பிரகாசியாநின்ற  தனது
இரத்தினங்களை,   வைப்பிடம்   -   வைக்கும்படியான   இடத்தை,
தேடுவான்   -   தேடுகின்றவனாய்,   சிரிபூதியை - ஸ்ரீபூதியென்னும்
மந்திரியிடம், நண்ணினான் - அடைந்தான், எ-று.

     பொருண்முடிபு   நோக்கி   ‘சேர்வேன் என்று"  என்னுந்தொடர்
இசையெச்சமாக வருவித்துரைக்கப்பட்டது.                    (20)

 244. மிக்க சீர்த்தியன் வேதியன் வேந்தற்குத்
     தக்க மந்திரி சத்திய கோடனென்
     றெக்க தைப்புரா ணஞ்சுரு திப்பொருள்
     வக்க ணிப்பவன் மானவ னல்லனே.

     (இ-ள்.)  (அவ்வாறடைந்தவன்) மிக்க - மிகுதியாகிய, சீர்த்தியன்
- சிறப்பையுடையவன், வேதியன் - ஜாதியில் பிராமணன், வேந்தற்கு -
அரசனுக்கு,   தக்க   -   தகுதியாகிய,   மந்திரி   -   அமைச்சன்,
சத்தியகோடனென்று     -     சத்தியகோஷனென்று     பலராலுஞ்
சொல்லப்பெற்று,   எக்கதை  -  எந்தக்  கதைகளையும்,  புராணம் -
புராணங்களையும்,     சுருதிப்பொருள்   -    வேதார்த்தங்களையும்,
வக்கணிப்பவன்       -       வர்ணித்துச்      சொல்லும்படியான
விற்பனத்தையுடையவன்,  மானவனல்லன் - இவன் மனித  ஜன்மத்தில்
சார்ந்தவனல்லன் (தேவாம்சத்தையுடையவன்), எ-று.             (21)

 245. தக்க தொன்றிவன் கைப்பொருள் வைத்தலென்
     றக்க ணத்தொரு பாகுட மீந்தபின்
     மிக்க மாசனம் வீந்ததோர் போழ்தினிற்
     றொக்க தன்கரு மஞ்சொல மற்றவன்.