நன்றாய - பவித்திரமாகிய,
உண்டி - ஆகாரத்தை, தான்.
தாதாவானவன் - உவந்து, சந்தோஷித்து, எவர்க்கும் - யாவர்க்கும்,
ஈதல் - கொடுப்பது, தானமாம் - ஆஹாரதானமாகும்,
தானும் -
அதுவும், மூன்றாம் - உத்தமமத்திம ஜகன்னிய பாத்திர பேதத்தால்
மூன்று விதமாகும், மூன்றும் - அந்த மூன்றும், ஊனுணும் கொடுமை
யார்க்கும் உடன்பட்டு - சம்பந்தப்பட்டு மாம்ஸம் புசிக்கும் அஸம்யத
ஸம்மியக் திருஷ்டிகளுக்கும், ஊனுணார்களுக்கும், மாம்ஸம் புசிக்காத
விரதத்தை பலமாகவுடைய வீரதீகன் முதலாகியவர்களுக்கும், மான -
பெருமையாகிய குணத்தையுடைய, மாதவர்க்கும் - மஹாதபசையுடைய
முனிவர்களுக்கும், ஈதல் வரிசையால் -
ஆகாரம் கொடுக்கும்
கிரமத்தினாலே, பெருகும் -
விருத்தியடையும், (அதாவது :
சம்பந்தப்பட்டு மாம்ஸம் புசிக்கும்
அஸம்யத ஸம்யக்
திருஷ்டிகளுக்குக் கொடுப்பது ஜகன்னிய பாத்திரதானமென்றும்,
மாம்ஸம் புசிக்காத விரதத்தை பலமாகவுடைய
விரதீகன்
முதலானவர்களுக்குக் கொடுப்பது மத்தியம பாத்திர தானமென்றும்,
மகாதபசையுடைய முனிவரர்களுக்குக் கொடுப்பது
உத்தம
பாத்திரதானமென்றும் சொல்லப்பட்டு விருத்தியாகும்), எ-று.
இதிற் கூறப்பட்ட அஸம்யத
ஸம்யக் திருஷ்டி யாரென்றால்
நாலாங் குணஸ்தானவர்த்தி தர்சனீகனாகும். அவன் மூடத்திரயம்,
அஷ்டமதம், சங்காதி, அஷ்டதோஷம், ஷட் அநாயதநம் என்னும்
இருபத்தைந்து மலங்களினீங்கிய சம்மியக்த்துவத்தையுடையவன்; மது,
மத்திய, மாம்ஸம் புசிப்பவனல்லன்; அப்படியிருகக அவனை ஊனுணும்
கொடுமையானென்று ஆசிரியர் ஏன்சொன்னாரென்றால் அவன் ஆப்த,
ஆகம, குருக்களை அறிந்தவனாயும்,
தத்துவார்த்த
சிரத்தானமுள்ளவனாயும், அஸம்யத னென்கிறதினால் விரதமில்லாதவன்
ஆகையினால் ஊனுணும் கொடுமையானென்றார்; எப்படியென்றால்
அவன் விரதங் கைக்கொள்ளாததினாலே வெங்காயமுதலான கந்த
மூலாதிகளைப் புசிக்கிறான்; கந்த மூலாதிகள் அனந்தஜீவ நிகாயமாய்
நிகோத ஜீவன்கள் உற்பத்திக்கு ஸ்தானமாயிருப்பதால்
அவற்றை
அவன் தின்கிறதினாலே ஊனுணும் கொடுமையானென்னு
சொல்லப்பட்டான்; அவனுக்கு ஆகாரமளிப்பது மேற்கூறியபடி
ஜகன்னிய பாத்திரதானமாகும்; இப்படி அஸம்யதஸம்யக் திஷ்டியே
ஜகன்னிய பாத்திரமாயிருக்கின் மித்தியா திருஷ்டி, மிஸ்ரன் முதலாகிய
பேர்களுக்குத் தானங் கொடுக்கக் கூடாதே யெனின் அவர்களுக்கும்
கொடுக்கலாம். ஆனால் அது பாத்திரமாகாது. அப்படியிருந்தும் அது
கொடுக்கலாமென எவ்வாறு ஏற்பட்டதெனின்
ஜீவதயவினால்
ஸதாவரஜங்கமாதி சமஸ்த ஜீவன்களையும் ரக்ஷிக்கவேண்டும்;
எல்லாவற்றிற்கும் உபகாரம் பண்ணவேண்டும் என்று ஜினேஸ்வரர்
கூறியருளியபடியினாலே அவ்வாறு ஏற்பட்டது.
ஆதலின்
அவர்களுக்கு ஆகார மளிக்கலாம்; அந்தப்பாத்
திரயோக்கிய
மல்லாத தானத்தின் பலனை
ஆசிரியர் அடுத்தபாடலில்
தெரிவிக்கிறார். ஸம்யக்த்துவத்தின் விவரங்களை பதார்த்தஸாரம்
ஸம்மியக்த்துவாதிகாரத்தில் கண்டு கொள்க. உடன்பட்டும் என்பதில்
உம்மை - அசை. (126)
|