(இ-ள்.)
உறவியை - ஜீவன்களை, பெரிதும் - மிகவும், ஓம்பி -
பாதுகாத்து, ஒழுக்கத்தை - ஸாமாயிகாதி சாரித்திரத்த,
நிறுத்தி -
தன்னிடத்திலிருத்தி, உள்ளம் - மனமானது, பொறிவழி - பஞ்சேந்திரிய
வழிகளில், படர்ச்சி - செல்வத்தை, நீக்கி - செல்ல
வொட்டாமல்
பரிகரித்து, பிறர்க்கு - அன்னியர்களுக்கு, நன்றாற்றி - நன்மையையே
செய்து, பொய்தீர் - குற்றந்தீர்ந்த, நெறியினை - சன்மார்க்கமாகிற
இரத்தினத்திரயத்தை, தாங்கி - தரித்து, நீங்கா
- ஒருகாலும்
நீங்குதலில்லாத, வீட்டின்பம் - மோக்ஷ சௌக்கியத்தை, விழைதல்
செய்யும் - இச்சிக்கும், உறு - பெரிதாகிய, தவர்க்கு - தவசையுடைய
மகா முனிவரர்களுக்கு, ஈந்த வெல்லாம் - கொடுக்கப்பட்டவைக
ளெல்லாம், உத்தம தானமாம் - உத்தம தானமாகும், எ-று. (129)
353. ஊனொடு தேனுங் கள்ளு முவந்தவை பிறவு மீதற்
றானமென் றுரைத்துத் தம்மைக் கொன்றுயிர்க் கூனை யீவாா
தானமுந் தயாவு மெல்லாந் தாங்கண்ட வாறு காண்க
வீனமென் றாலுங் கேளா ரியல்புவே றுலகத் தாரே.
(இ-ள்.) ஊனொடு - மாம்ஸத்தோடு,
தேனும் - மதுவும், கள்ளும்
- கள்ளு முதலாகிய அந்த ஜீவநிகாய வஸ்துக்களையும், உவந்தவை -
அவையல்லாமலும் ஏற்றுக்கொள்பவர் சந்தோஷிப்பவைகளான, பிறவும்
- இன்னம் அனேக வஸ்துக்களையும், ஈதல் -
கொடுப்பது,
தானமென்று - தானமாகு மென்று, உரைத்து - சொல்லி, தம்மை
-
தங்களையும், கொன்று - கொலை செய்து, உயிர்க்கு
- அன்னிய
ஜீவர்களுக்கு, ஊனை - மாம்ஸத்தை, ஈவார் - கொடுப்பவர்களாற்
செய்யப்பட்ட, தானமும் - தானமும், தயாவும் - தயவும், எல்லாம்
-
ஆகிய இவைகளையெல்லாம், தாங்கண்டவாறு காண்க -
தாங்கள்
கண்டபடியே காண்க, இயல்பு - இயற்கையானது, வேறு - வேறாகிய,
(அதாவது ஸ்வபாவ குணத்தை [தத்துவ ஞானத்தை] யறிதலைவிட்டு
விபாவகுணத்தை யடைந்து அஞ்ஞானிகளாகிய),
உலகத்தார் -
இவ்வுலகத்திலுள்ளவர்கள், ஈனமென்றாலும் -
இவ்வித
அயோக்கியமாகிய தானம் குறைவான காரியமென்று சொன்னாலும்,
கேளார் - கேட்கமாட்டார்கள், எ-று.
354. அனகமா யனந்த மாய குணம்புணர்ந்த தார்வ மாதி
தனையிலா தியல்பி னின்றான் றன்மையைத் தன்கண் வைத்து
நினைதலுக் கேது நல்ல சிறப்பது வினையை நீக்குங்
கனலிசேர் கனகந் தன்கண் காளத்தைக் கழற்று மாறே.
(இ-ள்.) அனகமாய்
- பாபரஹிதமாகி, அனந்தமாய -
முடிவில்லாத, குணம் - ஞானாதி குணங்களை, புணர்ந்து - சேர்ந்து,
ஆர்வமாதி - ராகத் வேஷாதிகளின் கூட்டம், இலாது - இல்லாமல்,
இயல்பின் - ஸ்வபாவத்தில், நின்றான் - |