திரிகின்ற காலத்தில், கைப்பட்ட - தன் கையிலுண்டாகிய, பொருளை
யெல்லாம் - திரவியங்களை யெல்லாம், கருணையால் - தயவினால்,
ஈயும் - கொடுக்கும், அந்த - அந்த, மெய்ப்பட்ட - உண்மையாகிற,
புகழினான் - கீர்த்தியையுடைய பத்திரமித்திரன், அவ்வனத்திடை -
அக்காட்டில், விரகில் - உற்சாகமாக, புக்கான் - அடைந்தான், எ-று. (7) 364. காரணந் தானொன் றின்றிக் கருமத்தின் பெருமை யாலே
வாரணிந் திலங்குங் கொங்கை மங்கைய ரோடவ் வள்ளல்
தாரணி சோலைக் குன்றந் தன்னுளே திரியும் போழ்தின்
வேரநின்றிலங்குஞ் சிந்தை வேங்கைநின்றதனைக் கண்டான்.
(இ-ள்.) (அவ்வாறடைந்து) காரணந்தான் - காரணமானது, ஒன்று
- யாதொன்றும், இன்றி - இல்லாமல், கருமத்தின் - கருமத்தினது,
பெருமையாலே - மிகுதிப்பாட்டினாலே, வார் - இரவிக்கையை,
அணிந்து - தரித்து, இலங்கும் - விளங்கும், கொங்கை -
ஸ்தனங்களையுடைய, மங்கையரோடு - ஸ்திரீகளோடு, அவ்வள்ளல் -
அவ்வீகைத்தன்மையுடைய பத்திரமித்திரன், தார் -
பூங்கொத்துக்களையுடைய, அணி - அழகுபெற்ற, சோலை -
தோப்புகளையுடைய, குன்றம் தன்னுளே - பர்வதத்திலே,
திரியும்போழ்தில் -திரிகின்ற காலத்தில்,வேரநின்று - வைரபாவத்தோடு
கூடிநின்று, இலங்கும் - விளங்கும், சிந்தை - மனத்தையுடைய,
வேங்கைநின்றதனை - அவ்விடத்தில் நின்றதாகிய அப்புலியை,
கண்டான் - பார்த்தான், எ-று. (8)
365. கண்டவன் பெயரு மெல்லைக் கடியதோர் பசியி னாலும்
எண்டிசை யவரு நிற்ப வெழுந்தவே ரத்து மோடி
விண்டெரி விளக்கின் மேலே விட்டில்பாய்ந்திட்ட தேபோல்
தண்டிவர் தோளி னான்மேற் றாப்ப்புலி பாய்ந்த தன்றே.
(இ-ள்.) கண்டவன் - (மேற்கூறியபடி புலியைப்) பார்த்த அவன்
பெயருமெல்லை - அதைவிட்டு நீங்கிச்செல்லுந் தருணத்தில், கடியது
- தீவிர முள்ளதாகிய, ஓர் - ஒப்பற்ற, பசியினாலும் - பசி
வேதனையாலும், எழுந்த - (அவனைக்கண்ட மாத்திரத்தில்)
உண்டாகிய, வேரத்தும் - வைரபாவத்தினாலும், ஓடி - விரைந்து
சென்று, விண்டு - மிகுதியாக ஒளிவிட்டு, எரி - எரிகின்ற,
விளக்கின்மேல் - தீபத்தின்மேல், விட்டில் - விட்டிலானது,
பாய்ந்திட்டதே போல் - பாய்ந்து அதனை அவிப்பதைப்போல,
எண்டிசையவரும் - அஷ்டதிக்கிலுள்ளவர்களும், நிற்ப - இருக்க,
தண்டு - ஸ்தம்பம், இவர் - (அவற்றின் திரட்சியையும் அழகையும்
பெறும்பொருட்டு) விரும்புகின்ற, தோளினான்மேல் -
தோள்களையுடைய பத்திரமித்திரன்மேல், தாய்ப்புலி - முன்னே
சுமித்திரையென்னும் தாயாயிருந்த புலியானது, பாய்ந்தது - பாய்ந்து
அவனைக்கொன்றது, எ-று. (9)
|