புண்ணின்மேல் பட்டவேல் போல வச்சொலை
யெண்ணிடா திகழ்ந்தவ னெழுந்து போயினான்.
(இ-ள்.) மண்ணின்மேல் - இப்பூமியின்மேல், மற்று - பின்னையும்,
இந்தச் செல்வம் - இப்படிப்பட்ட ராஜஐஸ்வரியமானது, மேல்வர -
மேலாக வரும் படி, எண்ணி - நினைத்து, புண்ணியம் -
சுபபரிணாமமாகிய புண்ணியத்தை, ஈண்ட - பொருந்த, நீ செய்கென -
நீ இப்போது செய்வாயாக வென்று யான் சொல்ல, (அச்சொல்லானது
அவனுக்கு) புண்ணின் மேல் - இரணத்தின் மேல், பட்டவேல் போல
- பாய்ந்த வேலாயுதத்தைப் போல (வருத்தஞ் செய்ய அதனால்),
அச்சொல்லை - என்னால் சொல்லப்பட்ட அந்தத் தர்ம வசனத்தை,
எண்ணிடாது - உயர்ந்ததாக நினைக்காமல், இகழ்ந்து - இகழ்ச்சி
செய்து, அவன் - அவ்வரசகுமாரன், எழுந்து போயினான் - என்னை
விட்டு நீங்கி எழுந்து போய்விட்டான்,
எ-று. (94)
451. புலங்கண்மேல் புரிந்தெழு பொறிக ளோம்பியே
விலங்குபோ லேயவன் வீய்ந்து போகுமோ
இலங்குசெம் பொன்னெயி லிறைவ னல்லறத்
தலங்கல்வே லானவ னடையு மோசொலாய்.
(இ-ள்.) (ஆதலின்) புலங்கள் மேல் - ஐம்புல விஷய
வஸ்துக்களின் மேல், புரிந்து - விரும்பி, எழு - எழுகின்ற, பொறிகள்
- பஞ்சேந்திரியங்களையும், ஓம்பி - உபசரித்து, அவன் -
அக்குமாரன், விலங்குபோல் - மிருகத்தைப் போல (அதாவது :
திரியக் ஜீவனைப்போல), வீய்ந்து போகுமோ - அழிந்துபோவனோ,
(அல்லது) இலங்கும் - விளங்கும், செம்பொன் -
சிவந்தபொன்னாலாகிய, எயில் - மும்மதில் சூழ்ந்த சமவசரணத்தில்
வீற்றிருக்கின்ற, இறைவன் - அருகத்பரமேஸ்வரனால் அருளிச்
செய்யப்பட்ட, நல் - நல்ல, அறத்து - ஸ்ரீ ஜிநதருமத்தில், அலங்கல்
- மாலையையணிந்த, வேலான் - வேலாயுதத்தை யுடையவனாகிய,
அவன் - அவ்வரச குமாரனான பூரணசந்திரன், அடையுமோ -
சேர்வானோ, சொல்லாய் - சுவாமி நீ எனக்குச் சொல்வாயாக (என்று
கூறினான்), எ-று. (95)
வேறு.
452. மாதவி யுரைத்த வெல்லாம் மாதவன் மனத்தை நோக்கும்
போதியி னுணர்ந் தறத்தைப் புரவலன் புரிந்து கொள்ளும்
யாதுநீ கவல வேண்டா மதனுக்கே யேது வாக
வோதுமிக் கதையைக் கேட்டு நீயவற் குரைக்க வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு) மாதவி - பெரிய தவத்தையுடைய
இராமதத்தாரியாங்கனை, உரைத்தவெல்லாம் - சொல்லியவைகளை
யெல்லாம், மாதவன் - பெரிய
|