பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 21


 

     (இ-ள்)  சூட்சியால் - உபாயத்தினால்,   பகை - சத்துருக்களை,
சுருக்கலல்லது   -   குறையச்   செய்வதே   யல்லாமல்,   வாள்  -
வாளாயுதத்தினால்,  செய்  -  செய்கின்ற,  போர் - யுத்தம்,  இலன் -
இல்லாதவன்,  வன்சொல்  இன்றி  -  கடுஞ்சொல்  இல்லாமல்  (இன்
சொல்லால் செய்யும்),  மண் ஆட்சியால் - பூலோக ஆளுகையினாலே,
இசைகேட்ட   -   இனிமையான  கீதத்தைக்   கேட்ட,  அசுணமா -
அசுணப்பறவையின்,  தாட்சிபோல் - வணக்கத்தைப்போல,  வையம் -
உலகிலுள்ளோர்,  இறைஞ்சும் - தாமாகவே அவனை வணங்குவார்கள்,
எ-று.

     தான் - அசை.                                     (44)

 45. நல்ல தொல்குலத் தரச னாதலாற்
    சொல்லுஞ் செய்கையுஞ் சோர்வெய் தாமையாற்
    புல்லி னார்புகழ் மாது பூமகள்
    சொல்லின் செல்வியுஞ் சுளிவு நீங்கியே.

     (இ-ள்)  (இன்னும்  அவன்)   நல்ல - நன்மையாகிய,  தொல் -
பழமை பொருந்திய, குலத்து - உயர்குலத்தில் பிறந்த, அரசனாதலால் -
இராஜாவாகையினாலும்,   சொல்லும்   -   வசனமும்,  செய்கையும் -
காரியமும்,   சோர்  வெய்தாமையால்   -  சோர்வடையாதபடியாலும்,
புகழ்மாது - கீர்த்திதேவியும், பூமகள் - இலக்குமி தேவியும், சொல்லின்
செல்வியும் - சரஸ்வதிதேவியும், சுளிவு - கோபம் (விரோதம்), நீங்கி -
இல்லாமல், புல்லினார் - அவனைச் சேர்ந்தார்கள், எ-று.

     எனவே அவன் பெரும்புண்ணியமுடையவனென்பது பெறப்படும்.
இப்புண்ணியோதயத்தாலாகிய,   புகழ்   பூமி   ஞானங்கள்    உலக
வழக்கிற்கிணங்கப்    பெண்பாலாகச்   சொல்லப்பட்டன.  [சாஸ்திரப்
பிரமாணத்தில்   லௌகீகம்,   பரமார்த்தம்   என   இருவகையுண்டு;
அவற்றுள் பரமார்த்தம்  என்பது - நிச்சயம்  (யதாஸ்வ ரூபம்) ஆகும்.
லௌகீகம்  -  பலவிதமாகும்.  ஆகையால்   உலக   வழக்கிற்கேற்ப
இச்சொய்யுளில் புண்ணியம் பலவிதமாகச் சொல்லப்பட்டது.]      (45)

வேறு.

 46. கற்பகந் தனையணை காமர் வல்லிபோல்
    வெற்றிவேல் வேந்தனை வேள்வி நீர்மையாற்
    பொற்பமைந் தெழுதிய கொடிய னார்புணர்ந்
    தற்புநீர்க் கடலிடை யழுந்து நாளிலே.

     (இ-ள்)    கற்பகந்தனை    -    கற்பகமரத்தை,   அணை -
சேர்ந்திருக்கின்ற,  காமர் வல்லிபோல்  -  காமர்வல்லிக் கொடிபோல,
வெற்றி   -   ஜெயம்பொருந்திய,  வேல்  -  வேலாயுதத்தையுடைய,
வேந்தனை - வைசயந்தனென்னுமிவ்வரசனை, பொற்