பக்கம் எண் :


24மேருமந்தர புராணம்  


 

    வஞ்சிநுண் ணிடைமல ராட்கி டந்துடை
    யஞ்சொலார் மனக்களி றணைபொற் றம்பமே.

     (இ-ள்) குஞ்சிகள் - (அப்புத்திரனது) தலையின் மயிர்கள், நிழல்
- பிரகாசம்  பொருந்திய,   மணி   -   இந்திரநீல   ரத்தினத்தினது,
கதிர்க்குழாம் - கிரணசமுகங்களாகும்; முகம் - முகமானது, மஞ்சிலா -
களங்கமில்லாத, மதி - சந்திரனையொக்கும்; புயம் - தோள்கள், மணி
- அழகிய, எழுக்கள் - ஸ்தம்பங்களையொக்கும்;  மார் - மார்பானது,
வஞ்சி  -  கொடிப்போன்ற,    நுண்  -  மெல்லிதாகிய,   இடை  -
இடையையுடைய,   மலராட்கு -  இலக்குமிக்கு,   இடம் - இடமாகும்;
துடை   -   துடைகளானவை,   அம்   -   அழகிய,  சொல்லார் -
சொல்லையுடைய மாதர்களது, மனம் - மனமாகிய, களிறு - யானையை,
அணை  - கட்டும்படியான, பொற்றம்பம் - அழகிய ஸ்தம்பங்களாகும்,
எ-று.                                                  (51)

வேறு

 52. மணியி னைக்கடைந் தாக்கிய வானவிற்
    கணைபெய் தூணிக ளாங்கணைக் காலடி
    பிணிய வீழ்ந்தசெந் தாமரைப் பீடினா
    லணியி னுக்கணி யும்மவ னாயினான்.

     (இ-ள்)   கணைக்கால்   -   கணைக்கால்கள்,   மணியினை -
இரத்தினங்களை,   கடைந்து   -   கடைசல்   பிடித்து,  ஆக்கிய -
(அவற்றால்)  செய்யப்பட்டிருக்கிற,  வானவில் - இந்திரன்  தனுவினது,
கணை  -  அம்புகளை,   பெய்  -  வைக்கப்பட்ட,   தூணிகளாம் -
அம்பறாத்தூணிகளை யொக்கும்;  அடி - பாதங்கள்,  பிணியவிழ்ந்த -
கட்டவிழ்ந்து   மலர்ந்திராநின்ற,   செம்   -   சிவந்த,   தாமரை  -
தாமரைப்பூவை யொக்கும், பீடினால் - பெருமையினால், அணியினுக்கு
- அழகுகளுக்கெல்லாம்,   அவன் - அக்குமாரனானவன்,   அணியும்
ஆயினான் - மேலான அழகானான், எ-று.                   (52)

 53. இந்து வின்னுத யத்திலங் குந்திசை
    வந்த தாரகை போல மடந்தைபால்
    மைந்தன் வந்து பிறந்து சயந்தனென்
    றிந்த வையக மேத்த வளர்ந்தநாள்.

     (இ-ள்) (இவன்செய்தி இப்படியிருக்க) இந்துவின் - சந்திரனுடைய
உதயத்து   -   உதயத்தினாலே,   இலங்கும்  -  விளங்கும், திசை -
கீழ்த்திசையில்   வந்த  -  பிறகு   உதயமாகிவந்த,  தாரகைபோல -
நட்சத்திரம்போல,   மடந்தைபால்   -   அம்மாதினிடமாக,  வந்து -
கருப்பத்தில் வந்து, மைந்தன் - மற்றொருபுத்திரன், பிறந்து - தோன்றி,
சயந்தனென்று - சயந்தனென்னும் நாமமுடையனாகி, இந்த