மந்திரமாகிய கவசத்தோடும்), பன்னரும் - சொல்லுதற்கரிய, மூவரும் -
(ஆச்சாரிய, உபாத்தியாய, சாதுக்கள் என்னும்) மூவரும், அத்திரம் -
(இருகையிலும்) இரண்டு ஆயுதங்களாக, பாங்கின் -
வரிசைக்கிரமத்தால், ஆயபின் - ஸ்தாபிதங்களான பிறகு, தன்னுடம்பு -
தன்னுடைய சரீரத்தையும், உயிரினை - தனது ஆத்மனையும்,
தடறுவாளென - உறையும் அதற்குள்ளே யிருக்கப்பட்ட
வாளாயுதமும்போல் பின்னத் திரவியங்களென்று, உன்னி நின்று -
(இவ்விதமாகச் சரீரம்வேறு, ஆத்மன்வேறென்று அதனதனுடைய
ஸ்வரூபம்) பாவித்து நின்று, ஐம்பதம் - பஞ்சபரமேஷ்டி பதங்களை
(அல்லது பஞ்சமந்திரங்களை), உன்னி - மேலாக எண்ணி, ஓதினான் -
உச்சரித்தான், (அதாவது : ஜெபம் செய்தான்), எ . று. (97)
551. கண்ணினாற் களங்கமின் னிலையைக் கண்டிடா
பண்ணுறப் பெரியவர் பாதஞ் சேர்ந்தவப்
புண்ணியச் சுருதியைச் செவியிற் பூரியா
விண்ணுல கடைந்தனன் வென்றி வீரனே.
(இ-ள்.) (அவ்வாறாயபின்) வென்றி - ஆத்மவெற்றியை
யடையும்படியான, வீரன் - வீரபுருஷனாகிய சிம்மச்சந்திர முனிவன்,
கண்ணினால்- காட்சியினால் (அதாவது : தர்சனபலத்தால்), களங்கமில்
- மாசில்லாத, நிலையை - யாதார்த்த தத்துவத்தின் நிலையினை,
கண்டிடா - கண்டு, பண்ணுறு - குணமடையும்படியான, அப்பெரியவர்
பாதம் - அந்த ஆப்தர்களாகிய (பரமாத்ம, அந்தராத்மர்களது)
பாதத்தை, சேர்ந்து - ரக்ஷணையாகவடைந்து, அப்புண்ணியச் சுருதியை
- (அவர்களாலருளிச் செய்யப்பட்ட அப்பியுதய நைபேஸ்ரீரீயஸத்திற்குக்
காரணமாகிய பஞ்சாஸ்திகாய, ஷட்திரவிய, சப்ததத்துவ, நவபதார்த்த
ஸ்வரூபமாகிய) ப்ரவசனஸார ஸ்ரீதத்தை, செவியில் - காதில், பூரியா -
நிரப்பி, (அதாவது : ஸ்ரீதஜ் ஞானபலத்தையடைந்து), விண்ணுலகு -
தேவலோகத்தை, அடைந்தான் - அடைந்தான், எ-று.
சேர்ந்தவப் - என்பதில் அகரம் சாரியை. (98)
552. பொருவிலா வுலகெனும் புரவ லர்க்கு நற்
கிரிவமாங் கேவச்சத் தொன்ப தாவதை
மருவினான் மாலொளி விமான மற்றதிற்
பிரிதியங் கரத்தினைப் பெரிய வீரனே.
(இ-ள்.) (அவ்வாறடைந்து) புரவலர்க்கு - அரசர்க்கு, நல் -
நன்மையுடைய, கிரிவமாம் - கழுத்தாகிய, பொருவிலா -
உவமையில்லாத, உலகெனும் - லோகமென்று சொல்லப்பட்ட,
கேவச்சத்து - க்ரைவேயகத்தில், ஒன்பதாவதை - ஒன்பதாவதாகிய
உபரிமோபரிமக் கிரைவேயகத்தில்,மால் - பெரியதாகிய, ஒளி - ஜோதி |